தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இலங்கை முழுவதும் நுளம்புகளின் அடர்த்தி அதிகரித்துள்ளது என்று சமூக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி, இந்த ஆண்டு மொத்தம் 40,538 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 44.3% பேர் மேல் மாகாணத்திலும், 13.9% பேர் சப்ரகமுவ மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. தற்போதைய வானிலை காரணமாக டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) எச்சரிக்கிறது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் தற்போது அதிக ஆபத்தில் உள்ள மாவட்டங்களாக வைத்தியர் சமரவிக்ரம அடையாளப்படுத்தியுள்ளார்.
டெங்கு பரவல் காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் பெரும்பாலானவை இரத்தினபுரியில் நிகழ்ந்துள்ளன.
காய்ச்சல், உடல் வலி, தசை வலி, வாந்தி அல்லது குமட்டல் போன்றவற்றை அனுபவிக்க நேர்ந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் வைத்தியர் சமரவிக்ரம அறிவுறுத்தியுள்ளார்.