இலங்கைக்கு மின்சாரப் பேருந்துகளை வழங்குவதற்கான உதவித் திட்டத்தை சீனா பரிசீலித்து வருவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி nஷன்ஹோங் தெரிவித்தார். இந்தத் திட்டம் குறித்த செய்தி, இரு நாடுகளின் ஒத்துழைப்பில் ஒரு புதிய சகாப்தத்தை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதிக்காக வெளிநாட்டுச் செலாவணியை நம்பியிருக்கும் இலங்கை, கடந்த காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தட்டுப்பாட்டை சந்தித்தது. இதனால் பொதுப் போக்குவரத்து மற்றும் மக்களின் தினசரி வாழ்க்கை வெகுவாகப் பாதித்தது.
மின்சாரப் பேருந்துகளுக்கு மாறுவது, எரிபொருள் இறக்குமதியைக் குறைப்பதுடன், கொழும்பு போன்ற நகரங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் உதவும். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் போன்ற நிறுவனங்களின் ஆதரவுடன் மின்சார வாகனங்களுக்கான சோதனைத் திட்டங்கள் ஏற்கனவே இலங்கையில் நடந்து வருகின்றன.
சமீபத்திய ஆண்டுகளில், மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள், சினோபெக் எரிசக்தித் திட்டம் போன்ற சீன ஆதரவுடைய வளர்ச்சித் திட்டங்களில் இலங்கை சீரான முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த மின்சாரப் பேருந்துத் திட்டம், இந்த நீண்டகாலப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக உள்ளது. மறுபுறம் இந்த திட்டத்திற்கான அறிவிப்பு, கொழும்பில் நடைபெற்ற இலங்கை மாணவர்களுக்கான சீனாவின் பயிற்சிகளில் பங்கேற்கும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் வெளியிடப்பட்டது. நிர்வாகம், விவசாயம், சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட 17 முக்கியப் பகுதிகளில் இதுவரை கிட்டத்தட்ட 1,000 இலங்கையர்களுக்கு சீனா பயிற்சி அளித்துள்ளது.
இந்த மின்சாரப் பேருந்துத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அது இலங்கையின் போக்குவரத்துத் துறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். டீசல் பேருந்துகளுக்குப் பதிலாக மின்சாரப் பேருந்துகள் பயன்படுத்தப்படுவதால், கார்பன் உதவும். எரிபொருள் விலையின் நிலையற்ற தன்மையிலிருந்து இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை இந்தத் திட்டம் விடுவிக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.