சிலாபம் பகுதியில் 14 வயது மாணவி துஷ்பிரயோகம்: உறவினர் கைது

சிலாபம் பகுதியில் தனது தாய் மற்றும் தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த சிறுமி ஒருவர், அவரது நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிய சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன்போது, அவர் ஏற்கனவே இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சிகரமான முறையில் தெரியவந்துள்ளதாக சிலாபம் பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலையொன்றில் 9 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 14 வயது மற்றும் 7 மாதங்களையுடைய மாணவியே இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளார். சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் விரிவான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி, நாத்தாண்டிய – வலகாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் தனது வீட்டில் வைத்து முதன்முதலில் அத்துமீறலில் ஈடுபட்டதாகச் சிறுமி மாரவில பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய அந்த உறவினர், சிறுமிக்கு 500 ரூபா பணத்தையும் வழங்கியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய சந்தேகநபர் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதனைத் தவிர, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் திகதி, நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த தனது காதலனுடன் ஒரே நாளில் இரண்டு முறை உடலுறவில் ஈடுபட்டதாகச் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதியளித்ததால், இச்சம்பவம் குறித்து யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்ததாகச் சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறுமியின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள சந்தேகநபரான காதலனைக் கைது செய்ய சிலாபம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது தனது தாயின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள சிறுமி தொடர்பில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு