சிறைச்சாலை ஆயுதங்கள் அகற்றப்பட்டதாக கூறப்பட்ட பின் துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? – ஆனந்த பாலித கேள்வி

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலையிலிருந்த அனைத்து ஆயுதங்களும் 5ஆம் திகதி இரவே அகற்றப்பட்டுவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்த பின்னணியில், ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்றும், அதிகாரிகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் நிலைமை, அரசாங்கத்தின் முறையான தலையீடு இன்மையால் பெரும் மனிதப் பேரவலமாக மாறியுள்ளது. 5ஆம் திகதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டபோதிலும் உரிய பாதுகாப்பு வழங்கப்படாததால், 6ஆம் திகதி நிலைமை விபரீதமாகி சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 7 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, 5ஆம் திகதி இரவே சிறைச்சாலையில் இருந்த அனைத்து ஆயுதங்களும் அகற்றப்பட்டுவிட்டன. ஆனால், அமைச்சர்கள் ஊடகங்களை அச்சுறுத்தி வரும் தற்போதைய சூழலில், சிறைச்சாலையின் ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட காட்சிகளை ஊடகங்கள் வெளிப்படுத்தின. ஆயுதங்கள் அகற்றப்பட்ட பின் ஜன்னல் வழியாகச் சுட்டது யார்? என்ற கேள்வி தற்போது எழுகிறது.

இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த சிறைச்சாலைகளிலும் கைதிகளின் எண்ணிக்கை 41,000ஐத் தாண்டியுள்ளது. அதற்கமைய, 625 கைதிகள் மட்டுமே இருக்கக்கூடிய நீர்கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம் நிகழ்ந்த வேளையில் 2,426 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இவ்வளவு கைதிகள் இருக்கும் ஒரு சூழலில், சிறைச்சாலையைக் கண்காணிக்கவேண்டிய பாதுகாப்பு ஊழியர்களில் 140 அதிகாரிகள் பற்றாக்குறை நிலவியுள்ளது.

5ஆம் திகதி இரவே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டதே தவிர, இராணுவம் மற்றும் பொலிஸாரை கொண்டு முறையான பாதுகாப்புப் பலப்படுத்தல் செய்யப்படவில்லை. இதனால் 6ஆம் திகதி நடந்த படுகொலைகளுக்கு அரசாங்கமே இடமளித்துள்ளது.

இந்த மோதல் சம்பவம் நாகரிகமற்றது என்றாலும், இதன் மூலம் சிறைச்சாலையின் நெருக்கடி குறையும் என அமைச்சர் லால் காந்த முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார்.

மனித உயிர்கள் பலியானதை இடநெருக்கடி குறைவதற்கான வழியாகக் கூறும் அமைச்சரின் கருத்து, அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாட்டையே காட்டுவதுடன், அரசாங்கத்தின் மிக மோசமான மற்றும் பொறுப்பற்ற செயலாகும்.

தற்போதைய அரசாங்கம் நாட்டில் உள்ள விவசாயிகள், ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்களிடையே திட்டமிட்டு பிரிவினையையும், மோதல்களையும் உருவாக்கி, உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்க முயல்கின்றனர். அமைச்சர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியும் வருகின்றனர். ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்பாடுகளால் ஒட்டுமொத்த பொதுமக்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும் பாரியளவில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மனித உரிமை மீறல்கள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வெறும் பாராளுமன்றத்துக்குள் மட்டும் முடங்கிக் கிடக்காமல், சர்வதேச அமைப்புகள் மற்றும் மனித உரிமை பேரவைகளை நாடி அரசாங்கத்தின் முகத்திரையை வெளிக்கொண்டு வருவதற்கு ஒன்றிணைய வேண்டும் என்றார்.

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை

Untitled-5

தொடர் விடுமுறை: 2,354 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – விதிகளை மீறிய 400 ஆம்னி பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையையொட்டிப் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காகக் கிளாம்பாக்கத்திலிருந்து 2,354 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில்,

2

பரந்தூரைப் போல பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரத்திலும் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்: எம்.பி. துரை வைகோ நம்பிக்கை!

September 13, 2026

திருச்சி: திருச்சி மாவட்டம் கே.கள்ளிக்குடி ஊராட்சியில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய

725c2e6d9fca0dc4aada0ee563cfb1b495b36e3eddff80882083ace68426ca4f

மலேசியப் பிரதமரைச் சந்திக்க முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்க ஆளுநர் மாளிகை கோரிக்கை: பரபரப்புத் தகவல்!

September 13, 2026

சென்னை: புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமைச் சந்திப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்குமாறு

1200-675-26766517-thumbnail-16x9-trichy2-aspera

“ஆபாசமாகப் பேசுவதுதான் திமுகவின் அரசியல்!” – சேகர்பாவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

September 13, 2026

சென்னை: அரசியல் என்ற பெயரில் ஆபாசத்தையும், அவதூறையும் பேசுவதையே திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்