சிங்கப்பூர், மலேசியாவை சேர்ந்த தேரர்கள் ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தனர்!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள, சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தின் தலைவர் கலாநிதி வண, கே. குணரத்ன தேரர் தலைமையிலான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை சேர்ந்த குழு, வெள்ளிக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவை சந்தித்தது.

Clean Sri Lanka செயலகத்தின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க, இந்தக் குழு ஜனாதிபதியின் செயலாளரிடம் உறுதியளித்தது.

அண்மைய வரலாற்றில் இலங்கை முகங்கொடுத்த மிக மோசமான அனர்த்தமான டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கும் வெளிநாட்டு சங்கங்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவைப் பெற தமது சங்கம் உள்ளிட்ட குழு, சுய விருப்பத்துடன் முன்வந்தாக கலாநிதி வண, கே. குணரத்ன தேரர் இங்கு தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான பொருள் உதவிகளை துரிதப்படுத்தவும், அரசாங்கம் செயல்படுத்தும் Rebuilding Sri Lanka வேலைத்திட்டத்திற்கு ஒரு முறையான திட்டத்தின் கீழ் ஆதரவளிக்கவும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள், அடுத்த சில நாட்களில் இந்நாட்டுக்கு வந்து சேரும் என்றும் தூதுக்குழு மேலும் தெரிவித்தது.

சீரற்ற யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் முறையான வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க முறையான நகர திட்டத்தின் மூலம் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இங்கு தெரிவித்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைப் பிள்ளைகளுக்கு அவசியமான உபகரணங்களை வழங்குதல் தொடர்பான முதற்கட்ட இணக்கத்தை இரு தரப்பினரும் எட்டினர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அப்போன்சு, Clean Sri Lanka வேலைத் திட்டத்தின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தின் செயலாளர் டயனா லீ (Diana Lee), சிங்கப்பூர் சிங்கள பௌத்த சங்கத்தின் செயலாளர் ரஞ்சனி சில்வா, Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர் (சமூக) கபில செனரத் உட்பட தூதுக் குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.