சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படச் சீனா தயார்!

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிரந்தரக் குழுவின் உப தலைவர் வெங் டொங்மின் (Wang Dongming) மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையில் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை (17) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை அண்மையில் எதிர்கொண்ட இயற்கை அனர்த்தத்தின் போது சீன அரசாங்கம் வழங்கிய துரித உதவிகளுக்காகப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்ததோடு, அனர்த்தத்தின் பின்னர் இலங்கை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்புதல் மற்றும் மீளக்கட்டியெழுப்பும் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்ட வெங் டொங்மின், எதிர்வரும் மறுசீரமைப்புப் பணிகளுக்கும் சீனாவின் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார்.

பிரதமரின் அண்மைய சீன விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, பாடசாலை சீருடை, உர மானியம், டிஜிட்டல் கல்விச் செயற்பாடுகளுக்கான தொழில்நுட்ப உதவி, வீதி அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அத்துறைகளில் நட்புறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படச் சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்த வெங், இந்நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகத் தொடர்ச்சியாகப் பங்களிப்பு செய்வதாக உறுதி அளித்தார்.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த உறவை மேலும் பலப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் சீனத் தூதுவர் ஷி ஷென்ஹொங் (Qi Zhenhong), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமர் அலுவலகத்தினதும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினதும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

By C.G.Prashanthan

2

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் காலமானார்கள்

December 18, 2025

அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக் மகேந்திர அதிகாரி(Janak Mahendra Adikari) மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப்

old pa

யாழ்.பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு தடை!

December 18, 2025

யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

eur

இலங்கையின் நிவாரணப் பணிகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி உயர்வு

December 18, 2025

இலங்கையின் நிவாரணப் பணிகளுக்காக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் உடன்பட்டிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவி, 2.35 மில்லியன் யூரோ வரை

ba

கனடாவின் அரச நிறுவனங்கள் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உட்புறக் கட்டுப்பாட்டு குறித்து விசாரணை

December 18, 2025

கனடாவின் நிதித்துறையில் அதிகரித்து வரும் பணமோசடி முறைப்பாடுகளை தொடர்ந்து, சர்வதேச நிதிக் குற்றத்தடுப்பு அமைப்பான Financial Action Task Force

sure

மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

December 18, 2025

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீளக்கட்டியெழுப்புவதாக இருந்தால் அரசாங்கம் மாகாண சபைத்தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை வழங்க வேண்டும்

arrest

இலஞ்சம் பெற்ற போக்குவரத்துப் பொலிஸ் சார்ஜன்ட் கைது

December 18, 2025

மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ் பொறுப்பிலுள்ள சாரதி அனுமதிப்

g

இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு தடுப்பூசி காரணமா?

December 18, 2025

சர்ச்சைக்குரிய தடுப்பூசி தொடர்பில் விளக்கம் கொழும்பு IDH வைத்தியசாலையில் இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு ‘ஒண்டான்செட்ரான்’ (Ondansetron) தடுப்பூசிதான் காரணமா என்பது

kan

கணேமுல்ல சஞ்சீவ கொலை: சந்தேகநபருக்கு பிணை

December 18, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் அஸங்க எஸ்.

mu

இந்தியா தென்னாப்பிரிக்க 4-வது டி-20 போட்டி இரத்து

December 18, 2025

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில்

ind

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திரா ரேடேர்ஸ் நன்கொடை

December 18, 2025

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அரசாங்கத்தின் “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு Indra Traders (Pvt) Ltd

Ela

பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவு

December 18, 2025

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று (17) உத்தரவு விடுத்துள்ளது.

ra

மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

December 18, 2025

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை