சர்வதேச தரங்களுக்கமைய பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை மாற்றி நீதித்துறையைப் பலப்படுத்துங்கள் – அருண் சித்தார்த்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் மற்றும் பாரிய குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க புதிய சட்டமூலம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதை விடுத்து ஏலவே இருக்கின்ற சட்டங்களை வலுப்படுத்தி பக்கச்சார்பின்றி பொலிஸ் மற்றும் நீதித்துறையைப் பலப்படுத்துமாறு சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார்.

நேற்று (25/11/2025) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் அங்கு கருத்து தெரவிக்கையில்,

குற்றக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் சந்தேகநபர்களைத் நீண்ட நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க இந்த அரசாங்கமும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையே பாவிக்கின்றது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் பல குறைபாடுகளை கொண்டுள்ளது. பொலிஸ் காவலில் உள்ள நபரின் ஒப்புதல் வாக்குமூலம் ஒரு சட்டவலுவுள்ள ஆதாரமாக நீதிமன்றுகள் ஏற்கமுடியும் என பயங்கரவாத தடுப்பு சட்ட ஏற்பாடுகள் கூறுகின்றன.

அவ்வாறாயின் பொலிஸார் ஒருவரை சித்திரவதைக்குட்படுத்தி பெறும் வாக்குமூலம் அவருக்கு எதிரான வலுவான சாட்சியாக மாறுவதை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.

ஆகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு அச்சட்டம் நியாயமான வலுவான சர்வதேச தரங்களுக்கமைவான சட்டமாக மாற்றப்பட வேண்டும். அதே நேரம் குற்றுக்குழுக்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களையோ அல்லது பாரிய குற்றங்களுடன் தொடர்புடயவர்களையோ நீண்ட காலம் தடுத்து வைத்து விசாரிக்க புதிய சட்டமூலங்களை இயற்றுவதை விடுத்து இருக்கின்ற சட்டங்களைத் திருத்தி இன்னும் வலுப்படுத்த வேண்டும்.

காரணம் ஆங்கிலத்தில் The more corrupt the state, the more numerous the laws என்பார்கள். அதிக சட்டங்களை உருவாக்குவது ஊழல் மோசடிகளையும் அதிகரிக்கச் செய்யும் ஒரு செயல்பாடாகவே சர்வதேச ரீதியில் கருதப்படுகிறது.

அதாவது சட்டங்கள் அதிகமாக இருந்தால், தவறான பயன்படுத்துதலுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். அதிகாரிகள் அவற்றைத் தங்கள்படி விளக்கவும் அல்லது தேர்ந்தெடுத்து நடைமுறைபடுத்தவும் அதிக அதிகாரம் பெறுகின்றனர்.

ஒரு ஆரோக்கியமான அரசியல் சட்டங்கள் தெளிவாகவும், குறைவாகவும், நியாயமாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.

அதேவேளை கனடாவின் பிறம்ரன் நகரின் மேயர் பயங்கரவாதிகளாக தடை செய்யப்பட்ட குழுவினர் கொடியை ஏற்றியதன் மூலம் கனடிய criminal code எனப்படும் கனடிய சட்டத்தை மீறியுள்ளார்.

ஆகவே கனடிய (federal government) கூட்டாட்சி அரசு பற்றிக பிரவுன் அவர்களைக் கைது செய்து கனடிய சட்டதிட்டங்களின்படி தண்டிக்க வேண்டும் என அவர் கனடா அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறு அவரைத் கைது செய்து தண்டிப்பதன் மூலம் கனடா தனது சொந்த சட்டதிட்டங்களை பக்கச்சார்பின்றி மதிக்கும் ஒரு நாடு என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு