கொழும்பு துறைமுக வளாக மனிதப் புதைகுழிகள்; விசாரணைக்கு மக்கள் போராட்ட முன்னணி கோரிக்கை

கொழும்பு துறைமுக வளாகத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித புதைகுழிகள் குறித்து உடனடி மற்றும் விரிவான விசாரணைக்கு மக்கள் போராட்ட முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது, தீர்க்கப்படாத பலவந்தமாக காணாமலாக்கப்படுதல்கள் மற்றும் கடந்தகால அரச வன்முறைகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.

நேற்று (24) நீதி அமைச்சுக்குச் சென்ற மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான நுவன் போபகே ஊடகங்களிடம் உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.

மனித புதைக்குழிகள் தொடர்பான உண்மைகள் வெளிப்படைத்தன்மையுடன் ஆராயப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் நீண்டகால மோதல்கள் மற்றும் 1971, 1988–89 கலகங்களின் போது நடந்த கடுமையான ஒடுக்குமுறைகள் காரணமாகப் பரவலான கடத்தல்கள் மற்றும் காணாமலாக்கப்படுதல்கள் நிகழ்ந்தன.

வட மாகாணத்தில் மட்டும் 12,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது.

துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்புக்கூடுகள் யாருடையது, அவர்கள் எவ்வாறு இறந்தனர், அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என நுவன் போபகே இதன்போது கேள்வி எழுப்பினார்.

இந்த எலும்புக்கூடுகள், கடந்தகால கிளர்ச்சிக் காலங்களில் காணாமல் போன ஜே.வி.பி உறுப்பினர்களின் கொலைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

பலியானவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் என்றும், அரசாங்கம் தாமதமின்றி முழு அளவிலான, சுதந்திரமான விசாரணையைத் தொடங்கி உண்மைகளை மக்களுக்கு வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

iya

அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு – சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – காவிந்த ஜயவர்தன

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த

Harini-Amarasuriya

பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை!

December 6, 2025

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச

tha

மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை

December 6, 2025

மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5)

bam

பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்

December 6, 2025

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

mal

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் மாலைதீவினால் நன்கொடை

December 6, 2025

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்

ifj_1

அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

December 6, 2025

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும்

photo-collage.png (2)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு

December 6, 2025

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில்

Anusa

யாழ். இளைஞர் அனுசன் சர்வதேச ரீதியில் வெற்றியாளராக தெரிவு

December 6, 2025

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத்தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant

fa

அறவழியில் போராட்டம்; தையிட்டி விகாரையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிட்டவில்லை – அருட்தந்தை சத்திவேல்

December 6, 2025

தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை

anu

அனர்த்த மரண எண்ணிக்கை தொடர்பாகப் பொய்த் தகவல் கூறிய எம்.பிக்கு எதிராக வழக்கு

December 6, 2025

நாடாளுமன்றத்தை தவிர்த்து வெளியில் போலியான பிரசாரம் முன்வைக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் என்று ஜனாதிபதி அநுர

co

கொலன்னாவ பகுதியில் பாரிய நெருக்கடி…

December 6, 2025

மெகொட கொலன்னாவ பகுதியில் வெள்ளம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட

de

கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல்; 09 பேருக்கு அபராதம்

December 6, 2025

யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம்