கனடா பிரம்டன் மாநகர முகநூல் பகக்த்தில் மகளிர் தினக் கொண்டாட்டம் குறித்த செய்தி வெளியிடப்படுள்ளது. சர்வதேச மகளிர் தினம் என்பது நமது நகரத்தை வடிவமைத்து முன்னேற்றி வரும் பெண்களை கௌரவிக்கும் தருணமும், புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஊக்கமாகவும் விளங்குகிறது. இந்த ஆண்டின் உலகளாவிய கருப்பொருள் ‘கொடுத்தால் பெறலாம்’ (“Give to Gain” ) என்பதாகும். வழிகாட்டுதல், ஒத்துழைப்பு மற்றும் சமூக ஆதரவு ஆகியவை எவ்வாறு வாய்ப்புகளை உருவாக்கி பாலின சமத்துவத்தை முன்னேற்றுகின்றன என்பதை இது வலியுறுத்துகிறது.
மாலை நிகழ்ச்சியை இலவச குழு விவாதத்துடன் தொடங்குங்கள். கிரிஸ்டினா ஹவோரன் வழிநடத்தும் இந்த கலந்துரையாடலில் ஆண்ட்ரியா வில்சன், டாக்டர் ஆஷ்லி செபாஸ்டியன், அன்னி பய்னோ, அடி புத்த்வார் மற்றும் லீ ஆரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். வழிகாட்டுதல், தலைமைத்துவம் மற்றும் பிறருக்கு திருப்பிக் கொடுப்பது, எவ்வாறு வெற்றியை உருவாக்குகிறது என்பதைப் பற்றிய வலிமையான அனுபவக் கதைகளை அவர்கள் பகிர்ந்து கொள்ளவுள்ளார்கள்.
பிராம்ப்டன் முழுவதும் மாற்றத்தை முன்னெடுத்து வரும் உள்ளூர் பெண்கள் ஆதரவு மற்றும் வலுசேர்ப்பு அமைப்புகளுடன் இணைந்து, மாற்றத்தை உருவாக்கும் நபர்களை சந்தியுங்கள் என மக்களுக்கு பிரம்டன் மாநகரசபை அழைப்பு விடுத்துள்ளது.