கோயம்புத்தூர்
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்குக் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதை நிரந்தரமாகத் தடுக்கவும், பணமில்லாப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் ஆன்லைன் டிஜிட்டல் விற்பனை முறை கொண்டுவரப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ் பேட்டியின் முக்கிய அம்சங்கள்:
-
கூடுதல் கட்டணத்திற்கு முற்றுப்புள்ளி: டாஸ்மாக் கடைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் ரொக்கப் பணப் பரிவர்த்தனையைக் குறைக்கவும், வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகை வசூலிப்பதைத் தடுக்கவுமே இந்த ஆன்லைன் விற்பனை நடைமுறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
ஸ்டாக் விவரங்கள்: சில குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளில் சில பிராண்ட் மது வகைகள் மட்டுமே விற்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இனி ஆன்லைன் மூலம் எந்தெந்த கடையில் என்னென்ன மது வகைகள் இருப்பில் உள்ளன என்பதை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
-
700 பேர் ஆர்டர்: வெளிநாட்டு மதுபானங்கள் ஏற்கெனவே டாஸ்மாக் கடைகளில் கிடைக்கின்றன; வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகிறார்களோ அதைக் கொடுப்பதுதான் கடமை. ஆன்லைன் ஆர்டர் அமலுக்கு வந்த பிறகு, இதுவரை சுமார் 700 பேர் வரை டிஜிட்டல் முறையில் ஆர்டர் செய்து தங்களுக்குத் தேவையான மதுபானங்களைப் பெற்றுள்ளனர்.
-
குறைகளைக் களைய நடவடிக்கை: இந்த புதிய டிஜிட்டல் முறையில் என்னென்ன நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன என்பதையும் அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
கடந்த காலங்களில் இருந்த அரசுகள் இந்தத் துறையைச் சீர்படுத்த எந்தவொரு முறையான முயற்சியும் எடுக்கவில்லை என்றும், தற்போதைய தவெக அரசு அதற்கான முயற்சிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் விக்னேஷ் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
#TASMAC #OnlineTASMAC #MinisterVignesh #Coimbatore #TamilNaduNews #TVKGovernment #ThalapathyVijay #TNNewsUpdates #LatestNewsTN #TrendingTN #ViralNews #TNPolitics