குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்திய சாலையில் இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (07) அன்று மதியம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள டீசைட் தோட்டத்தில் இடம் பெற்று உள்ளது.
தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்து தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த பெண் ஒருவரையும் இரு ஆண்களையும் குளவி கொட்டியதால்
அம் மூவரையும் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு ஆண்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி தெரிவித்தார்.