குற்றவாளிகளை உடனடி கைது செய்ய வலியுறுத்தல் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலையுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து, கடும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இறுதியானதொரு சம்பவமாக இது இருத்தல் வேண்டும். இவ்வாறான சம்பவம் இனியொரு போதும் இடம்பெற கூடாது. அரசாங்கம் இதன் பொறுப்பை ஏற்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலைக்கு நீதி கோரி நேற்று சட்டத்தரணிகள் நேற்று உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வரை பேரணியாக சென்றனர். இதன்போது சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் தோற்றம் பெற்றுள்ள படுகொலை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் சட்டத்தரணிகள் சமூகத்தினர் நேற்று நீதிமன்ற கடமைகளில் இருந்து விலகியுள்ளார்கள்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டத்தை நேற்று முன்தினம் நடத்தி நான்கு தீர்மானங்களை ஏகமனதாக எடுத்தோம். இராணுவ தலைமையகத்தை அண்மித்த பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி பகிரங்கமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.

படுகொலை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், புத்திக மல்லவராச்சி படுகொலைக்கு நீதி கோரியும் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் கடமைகளில் இருந்து நேற்றுவிலகினோம். வடக்கு,கிழக்கு உட்பட சகல மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தது.

இவ்வாறான படுகொலைகள் இனிவரும் காலங்களில் இடம்பெற கூடாது என்பதற்காகவே இந்த ஒன்றிணைந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டவாட்சியை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலையானது இறுதியானதொரு சம்பவமாக இருத்தல் வேண்டும். இவ்வாறான சம்பவம் இனியொரு போதும் இடம்பெற கூடாது. அரசாங்கம் இதன் பொறுப்பை ஏற்க வேண்டும்.

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலையுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து, கடும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். நீதிபதிகள், சட்டத்தரணிகள் திணைக்களம் மற்றும் சட்டத்தரணிகள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.பொதுமக்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு