குஜராத் மாநில ஆளுநர் – விஜித ஹேரத் சந்திப்பு

இந்தியாவின் குஜராத் மாநில ஆளுநர் கலாநிதி தேவ்வ்ரத் மற்றும் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்ட உயர்மட்டத் தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பு நேற்று (05) இடம்பெற்றதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் கலாநிதி தேவ்வ்ரத், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலின் கீழ், குஜராத் மாநிலத்தில் வைக்கப்பட்டிருந்த புனித ஸ்ரீ சர்வக்ஞ தாதுக்களை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

குஜராத் மாநில வரலாற்றில், புனித ஸ்ரீ சர்வக்ஞ தாதுக்கள் வெளிநாடு ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், அதற்காக இலங்கையைத் தெரிவு செய்தமையானது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் வரலாற்று ரீதியான உறவை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தாதுக்கள் வழிபாட்டை ஏற்பாடு செய்வதற்கு குஜராத் மாநில அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். இது இலங்கைக்கும் குஜராத்திற்கும் இடையிலான நீண்டகால மத மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலின் போது, இந்தியாவின் முன்னணி கைத்தொழில் மையமான குஜராத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் அவதானம் செலுத்தினர்.

அதற்கமைய, அமுல் மற்றும் டாடா போன்ற குஜராத்தின் முன்னணி நிறுவனங்களுடன் நிலவும் கைத்தொழில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், இரு நாட்டு பௌத்த மக்களுக்கிடையிலான கலாசார பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் புதிய ஊக்குவிப்பு வாய்ப்புகள் குறித்துச் சாதகமான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.