காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றுடன் நிறைவு

மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம்(15.11.2025) மாலை நிறைவுக்கு வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளார் போராட்ட களத்தில் விசேட ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார்.

இதன்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் எஸ்.ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்து கொண்டதோடு, போராட்ட களத்தில் அங்கம் வகித்தவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார், மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரத்தையும் இருப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வரும் காற்றாலை மற்றும் கணிய மண் அகழ்வுக்கு எதிரான போராட்டம் இன்றைய தினம் 105 ஆவது நாளை கடக்கின்றது. ஜனாதிபதியின் அமைச்சரவை அறிவிப்பை நாங்கள் சற்று பரிசோதனைக்கு உட்படுத்தினோம்.

அதற்கமைவாக 105 ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை எமது போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுகின்றோம்.

எமது போராட்டம் என்ன கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டதோ அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

எங்களுடைய முக்கியமான கோரிக்கை என்ன என்றால் மன்னார் மண்ணிலே கணிய மணல் அகழ்வுக்கான அனைத்து வித அனுமதிகளும் நிறுத்தப்பட வேண்டும்.மேலும் மன்னார் தீவில் அகழ்வு செய்யப்படுகின்ற மணல் மண் தீவை விட்டு வெளியில் கொண்டு செல்லப்படுவது தவிர்க்க வேண்டும்.

கொண்டு செல்லப்படும் மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.எனவே அரசாங்கம் கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்காது என்ற நம்பிக்கையுடனே இந்த போராட்டத்தை நிறுத்துகிறோம்.

வெகு விரைவில் அரசாங்கம் கணிய மணல் தொடர்பாக அமைச்சரவை அனுமதியை பெற்று தேசிய கொள்கையாக அதனை அறிவிப்பார்கள் என்பதை நம்புகின்றோம்.

எதிர்வரும் காலத்தில் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொள்ளுவதற்காக எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை அரச அதிபர் தலைமையில் உடனடியாக அமைத்து குறித்த குழுவினுடைய கண்காணிப்பின் கீழ் எல்லா விதமான செயல்பாடுகளையும் முன்னெடுப்பது சிறந்ததாக அமையும் என்பதை இப்போராட்ட குழு சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளி பிரதம மௌலவி எம்.அஸீம் கருத்துக்களை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தலைமையிலான குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர், போராட்டக்குழு பிரதிநிதிகள், மன்னார் பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்

nug

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு

November 17, 2025

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள

uthaya

அரசாங்கம் செல்லும் வழி முறையற்றது – உதய கம்மன்பில

November 17, 2025

திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை

Sajith

மக்களின் வறுமை குறித்த சரியான நிலைப்பாடொன்று அரசாங்கத்திடம் இல்லை – சஜித் பிரேமதாச

November 17, 2025

மக்கள் மாற்றுத் தரப்பை நாடியிருந்தாலும், அந்த மாற்றுத் தரப்பு சரியாக அமைந்து காணப்படாமையினால் அவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று தோல்வி கண்டுள்ளன.

Sahara kari

​​”பிரஜாசக்தி” திட்டத்தின் தலைவர் பதவியில் JVP உறுப்பினர் நியமனம்: SLPP எதிர்ப்பு

November 17, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்கள், கட்சியின் தலைமை

aq

​அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி

November 17, 2025

எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ‘அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி’ குறித்து ஊடகங்களை

aab

உலக ஆணழகன் போட்டி: தமிழக வீரர் வெற்றி

November 17, 2025

உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் திறன் கூட்டமைப்பு சார்பில், 16ம் உலக ஆணழகன் போட்டி நவ., 11ல் துவங்கி நேற்று

rai

தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை

November 17, 2025

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் நிலையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதனால், சென்னை, செங்கல்பட்டு உட்பட ஏழு

fe

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்; ஆளுங்கட்சி தலையீடு?

November 17, 2025

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில், அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ளதால், தயாரிப்பாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

ra

ஊழல் என்பது ஒரு சாதாரண விடயம் என்ற நிலை இலங்கையில் மாற்றப்படவேண்டும்!

November 17, 2025

1978ம் ஆண்டின் பின் இலங்கையில் ஊழல் என்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது, அதனை மாற்றி அமைக்க தற்போதைய அரசு

pana

பிரதேச சபையில் பதற்றம்

November 17, 2025

பாணந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்காக கூட்டப்பட்ட இன்றைய (17) அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களின்

chi

தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் பிரதமரின் கருத்து

November 17, 2025

தைவானுக்கு எதிராக சீனா பலத்தைப் பயன்படுத்தினால் ஜப்பான் ராணுவ ரீதியாகத் தலையிடக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி எச்சரித்து