கார் ரேஸிங்கில் அஜித்தை சந்தித்த சிம்பு

அஜித் மலேசியாவில் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். அவரை அங்கு சென்று நடிகர் சிம்பு சந்தித்திருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது ரசிகர்களால் சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

அஜித் குமார் ஒருபக்கம் படங்கள் மறுபக்கம் கார் பந்தயங்கள் என பிசியாக இருக்கின்றார். தற்சமயம் மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார் அஜித். அங்கு இயக்குனர்கள் சிவா மற்றும் ஏ.எல் விஜய் ஆகியோரும் அஜித்துடன் இருக்கின்றனர். அஜித் கார் பந்தயங்களில் கலந்துகொள்வதை ஒரு ஆவணப்படமாக ஏ.எல் விஜய் இயக்கி வருகின்றார். மறுபக்கம் அஜித்தை வைத்து ஒரு விளம்பரத்தை சிவா இயக்கவுள்ளார்.

அதற்காக தான் இருவரும் மலேசியாவில் அஜித்துடன் இருக்கின்றனர் என தகவல்கள் வருகின்றன. தற்போது நடிகர் சிம்புவும் அஜித்தை மலேசியாவில் சந்தித்திருக்கிறார். அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகின்றது. சிம்புவும் தற்சமயம் மலேசியாவில் தான் இருக்கின்றார். இன்று காலை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிம்பு அதன் பிறகு அஜித் கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் இடத்திற்கு சென்று அவரை சந்தித்திருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் மற்றும் சிம்பு சந்தித்துக்கொள்ளும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் செம வைரலாக போய்க்கொண்டு இருக்கின்றது. சிம்பு ஆரம்பகாலகட்டங்களில் தன் ஒவ்வொரு படங்களிலும் அஜித் ரெபரென்ஸ் பயன்படுத்தி வந்தார். தான் அஜித்தின் தீவிரமான ரசிகர் என்பதை படத்திற்கு படம் குறிப்பிட்டு வந்தார் சிம்பு. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் தற்போது சந்தித்திருக்கும் வீடியோக்கள் இரு நடிகர்களின் ரசிகர்களாலும் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

December 8, 2025

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.வடக்கு ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது அமோரி

chand

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

December 8, 2025

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர்

Judment

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் போலி சட்டத்தரணி?

December 8, 2025

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

old

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

December 8, 2025

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும்

chinm

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

December 8, 2025

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு

chira

சிரஞ்சீவி – நயன்தாரா இணைவு

December 8, 2025

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின்

chami_1

பெண் விமானியின் கோரிக்கை; தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு

December 8, 2025

தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர்

nori

பிரித்தானியாவின் நொரிஸ் முதற் தடவையாக சம்பியனானார்

December 8, 2025

முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான்

sel

செல்டா விகோவிடம் தோற்ற றியல் மட்ரிட்

December 8, 2025

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-2 என்ற

chi

மனித நுகர்வுக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்

December 8, 2025

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல

water fal

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன?

December 8, 2025

நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு

nuw

டித்வா சூறாவளியால் விவசாயத் துறைச் சேதம்; ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

December 8, 2025

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர