அனுராதபுரம், நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் நேற்று(21) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த யுவதிக்கும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும் இடையே கடந்த 5 வருடங்களாகக் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது.
இவர்களது காதலுக்கு இரு வீட்டார் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், நீண்டகாலமாக இந்த உறவு நீடித்து வந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற தினமான இன்று, காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனமுடைந்த யுவதி, தனது வீட்டிலேயே தவறான முடிவெடுத்துக்கொண்டுள்ளார்.