களனிப் பல்கலைக்கழகத்தில் ‘பங்கேற்பு ஜனநாயகம்’

களனிப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் அரசியல் விஞ்ஞானத் துறை மற்றும் ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பு ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் நடத்தப்படும் ‘பங்கேற்பு ஜனநாயகம்’ தொடர்பான சான்றிதழ் கற்கை நெறி ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்வில், கற்கைநெறிக்காகத் தெரிவு செய்யப்பட்ட இளம் அரச கிராமிய கள அதிகாரிகளுக்குத் தலா 40,000 ரூபா பெறுமதியான 100 முழு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஆதரவுடன் நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள், கமநல சேவை அதிகாரிகள் உள்ளிட்ட 100 கிராமிய மட்ட கள அதிகாரிகள் முதல் இரண்டு குழுக்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அடிப்படை மட்டத்தில் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல் கற்கைநெறி மூலம், ஜனநாயக ஆட்சி, நல்லாட்சி மற்றும் சிவில் பங்குபற்றல் குறித்து ஆழமான அறிவையும் நடைமுறைப் பயிற்சியையும் அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும்.

கற்கைநெறி இணைப்பாளர் கலாநிதி தீகா தமயந்தி இதன் நோக்கங்களை தெளிவுபடுத்தியபோது, இலங்கையில் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தும் அரச ஊழியர்களை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய படியாகும் இது என வலியுறுத்தினார்.

கற்கைநெறிக்கான நிதி அனுசரணையை வழங்கும் ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பின் தலைவர் ரவீந்திர டி சில்வா கருத்து தெரிவிக்கையில், எமது நாட்டின் கிராமிய அரச சேவையில் ஜனநாயக விழுமியங்கள், புரிதல் மற்றும் அர்ப்பணிப்புக்காக முதலீடு செய்யக் கிடைத்தமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த முழு புலமைப்பரிசில் திட்டம் நாட்டின் கிராமிய அபிவிருத்திக்கு பெரும் பலமாக அமையும் என நாங்கள் நம்புகிறோம். மேலும், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இந்தக் கற்கைநெறிக்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இக் கற்கைநெறியின் எதிர்கால டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்புகளை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் களனிப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி மற்றும் பதில் உபவேந்தர் பேராசிரியர் எம். எம். குணதிலக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் விமுக்தி துஷாந்த, கற்கைநெறிக்காகத் தயாரிக்கப்பட்ட மேலதிக வாசிப்புப் புத்தகத் தொகுதியை அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் ஒசந்த தலபவிலவிடம் கையளித்தார்.

ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி பற்றிய அறிவுடன் ஆயுதம் ஏந்திய இந்தக் கள அதிகாரிகள், தமது சமூகங்களின் அபிவிருத்திக்கும் இலங்கையின் சிறந்த ஆட்சிக்கும் வலுவான பங்களிப்பை வழங்குவார்கள் என்று பல்கலைக்கழகமும் ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த