கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

அனர்த்த நிலைமை காரணமாக தங்கள் இருப்பிடத்தை மாற்றியுள்ள மாணவர்களுக்கு, வசதியான பரீட்சை மண்டபங்களில் பரீட்சை எழுதும் வாய்ப்பை வழங்க பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

பரீட்சை திகதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.

பாடசாலை விண்ணப்பதாரியின் இருப்பிடம் மாற்றப்பட்டிருந்தால் அதிபர், வலயக் கல்வி பணிப்பாளர் மூலம் பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்கலாம்.

தனியார் விண்ணப்பதாரராக இருந்தால், அவர்கள் பரீட்சை திணைக்களத்தின் தொடர்பு இலக்கமாக 1911 அல்லது 0112784537, 0112786616, 0112784208 என்ற தொலைபேசி எண்களுக்கு அழைத்து அவர்களுக்குத் தெரிவிக்கலாம் என ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Important Announcement For A L Exam Students

மேலும், ஒரு பாடசாலை அல்லது தனியார் விண்ணப்பதாரரின் தேர்வு அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், www.doenets.lk என்ற வலைத்தளத்திலிருந்து அதனை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதை அதிபர் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்கள் நேரில் அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒரு மாணவரின் அடையாள அட்டை தொலைந்து போயிருந்தால், அவர்கள் இரண்டு கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்களில் அதிபர் மற்றும் வலய கல்வி பணிப்பாளரின் கையொப்பத்தைப் பெறலாம்.

ஒரு தனியார் விண்ணப்பதாரராக இருந்தால், அவர்கள் புகைப்படங்களில் கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரால் கையொப்பமிடப்பட்டு, அவற்றை தற்காலிக அடையாள அட்டைகளாகப் பயன்படுத்தலாம்.

பரீட்சை எழுதும் மாணவர்களின் பாடகுறிப்புகள் தொலைந்து போயிருந்தால், சமூகத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு உதவுவது பொருத்தமானது என்பதையும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார்.

man

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதி விநியோக வழிகாட்டல்கள் வெளியீடு

December 14, 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதியை விநியோகிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பான வழிகாட்டுதல்களை பாதுகாப்பு அமைச்சகம்

mihi

மிகிந்தலையில் பாரிய வெடிப்புக்கள்?

December 14, 2025

மிகிந்தலை விகாரையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மிகிந்தலை விகாராதிபதி தெரிவித்துள்ளார். இன்று (14.12.2025) தேசிய கட்டிடங்கள் ஆராச்சி திணைக்களத்தின் அநுராதபுரம்

1751730278-rice-hjg-L

அனர்த்தம் ஏற்பட்டிருந்தும் கூட எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது – விவசாய அமைச்சர்

December 14, 2025

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். சில

arre

ஹேரோயினை கடத்த முற்பட்டவர் கைது

December 14, 2025

ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாக

3 dd

டித்வா புயல் காரணமாக சுமார் 6164 வரையிலான வீடுகள் முழுமையான சேதம்

December 14, 2025

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

gun

காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

December 14, 2025

பலாங்கொடை, சமனல வேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தெட்டுவ கிராமத்தின், காட்டுப் பகுதியில், கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம்

HAri

புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு!

December 14, 2025

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (10) அன்று பிரதமர்

Mujibar Rahuman

குழு ஒன்று முஜிபுரின் தங்கையிடம் விசாரணை: முஜிபுர் முறைப்பாடு

December 14, 2025

குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் குழு ஒன்று, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் கல்கிஸையில் உள்ள

ரயிலில் யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்!

December 14, 2025

ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்

சிரியாவில் அமெரிக்க வீரர்கள் படுகொலை!

December 14, 2025

சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும்

ஓமன் வளைகுடாவில் எரிபொருளுடன் கடத்தப்பட்ட கப்பல் ஒன்றை கைப்பற்றிய ஈரான்!

December 14, 2025

கடத்தப்பட்ட எரிபொருட்களுடன், ஓமன் வளைகுடாவில் ஒரு எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது இந்தியா, இலங்கை

சீனாவின் செல்வாக்கு இந்தியப் பெருங்கடலில் விரிவடைகின்றது?

December 14, 2025

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் ஒரு கொடிய சூறாவளியிலிருந்து இலங்கை மீண்டு வருவதால், கடல்சார் பாதுகாப்பு,