கல்விச் செலவின வீழ்ச்சி: இலங்கைக்கு பெரும் பின்னடைவு – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முறையற்ற வரிக்கொள்கை மற்றும் கல்வித்துறைக்கான குறைந்தளவு நிதி ஒதுக்கீட்டினால் பாடசாலைகள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பில் விளக்கியும், அவற்றுக்கான தீர்வுப்பரிந்துரைகளை உள்ளடக்கியும் ‘வரிச்சலுகைகளும் பாடசாலைகள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகளும்’ எனும் தலைப்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள 101 பக்க ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
மேற்படி ஆய்வறிக்கையைத் தயாரித்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளரும், வறுமை மற்றும் சமத்துவமின்மை தொடர்பான செயற்பாட்டாளருமான சாரா சாதுன் இலங்கையின் வரிக்கட்டமைப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
2019இல் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட மட்டுமீறிய அளவிலான வரிச்சலுகை வழங்கல் தீர்மானமானது அதன் நீட்சியான தொடர் விளைவுகளால் 2022 இல் தீவிர பொருளாதார நெருக்கடிக்கு வழிகோலியதாக 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முன்னெப்போதுமில்லாத வகையிலான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியது. பொருளாதார நெருக்கடியை அடுத்து கடன்களை மீளச்செலுத்துவதற்கான ஆற்றலை அரசாங்கம் இழந்தமையானது குறிப்பாக உணவுப்பொருட்களின் விலைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களின் வலுவான அதிகரிப்புக்கும், தற்போதுவரை தொடரும் தாக்கங்களான வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் சம்பளக்குறைப்பு போன்ற தாக்கங்களுக்கும் வழிவகுத்தது.
போராட்டங்களால் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிபீடத்திலிருந்து துரத்தப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்கள் மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டது. அத்தெரிவானது புதிய பொருளாதாரக்கட்டமைப்பை உருவாக்குவதில் இலங்கையர்கள் தெளிவாக இருப்பதைக் காண்பித்தது. அதனை முன்னிறுத்தி அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும், தற்போதைய மறுசீரமைப்புக்கள் இந்நெருக்கடியின் ஆணிவேரைக் களைவதற்குப் போதுமானவையன்று.
உயர்நீதிமன்றமானது இந்நெருக்கடிக்கு வழிகோலிய உடனடிக் காரணத்தில் கவனம் செலுத்தியிருந்தது. இருப்பினும் இப்பிரச்சினைக்கான அடிப்படை பல தசாப்தங்களுக்கு முன்னரே உருவாகியிருப்பதை நாம் கண்டறிந்துள்ளோம். 1970 களின் பிற்பகுதியில் இலங்கை ஒரு பொருளாதார நிலைமாற்றத்தை நோக்கி நகர்ந்தது. பெருநிறுவனங்களுக்கும் தனவந்தர்களுக்கும் சாதகமாக அமைந்த, குறைந்தளவு வருமானத்தையே ஈட்டித்தந்த வரிக்கொள்கைகளும் அதில் உள்ளடங்குகின்றன.
இவை 2022இல் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்டதுடன் மாத்திரமன்றி, மனித உரிமைகளுக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவேண்டிய செலவினங்களில் நிலவும் பாரிய பின்னடைவுக்கும் காரணமாக அமைந்தன. குறிப்பாக 2010 ஆம் ஆண்டளவிலே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகக் காணப்பட்ட கல்விக்கான செலவினங்கள், 2022ஆம் ஆண்டு 1.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.
இவ்வீழ்ச்சியானது முன்னொரு காலத்தில் கல்வித்துறையில் உலகநாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இலங்கை போன்றதொரு நாட்டுக்குப் பெரும் பின்னடைவாகும். தமது பிரஜைகளுக்கான இலவச ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை அறிமுகப்படுத்திய சில முதன்மை நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். சுதந்திரத்தின் பின்னர் அரச நிதி மூலம் வழங்கப்பட்ட கல்வியானது எழுத்தறிவு வீத உயர்வுக்கும், சமூக மற்றும் பொருளாதார இயங்குகைக்கும், சமத்துவமின்மை வீழ்ச்சிக்கும் பெரிதும் உதவியது.
1960 – 1970க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அரச வருமானத்தில் 90 சதவீதமானவை வரிகள் மூலம் திரட்டப்பட்டதுடன் அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 – 25 சதவீதமாகக் காணப்பட்டன. இது 3 – 5 சதவீத நிதி கல்வித்துறைக்கு செலவிடப்படுவதற்குப் பெரிதும் உதவியது.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது கல்வி உள்ளடங்கலாக இலங்கையர்களின் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு செயற்திறன்மிக்க வழிமுறைகள் ஊடாக வருமானத்தை அதிகரிப்பதற்கு ஏதுவான வரி மறுசீரமைப்புக்களை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். இது மனித உரிமைகளை மையப்படுத்திய பொருளாதாரக் கட்டமைப்பைக் கட்டியெழுப்பவேண்டிய தருணமாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்

nug

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு

November 17, 2025

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள

uthaya

அரசாங்கம் செல்லும் வழி முறையற்றது – உதய கம்மன்பில

November 17, 2025

திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை

Sajith

மக்களின் வறுமை குறித்த சரியான நிலைப்பாடொன்று அரசாங்கத்திடம் இல்லை – சஜித் பிரேமதாச

November 17, 2025

மக்கள் மாற்றுத் தரப்பை நாடியிருந்தாலும், அந்த மாற்றுத் தரப்பு சரியாக அமைந்து காணப்படாமையினால் அவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று தோல்வி கண்டுள்ளன.

Sahara kari

​​”பிரஜாசக்தி” திட்டத்தின் தலைவர் பதவியில் JVP உறுப்பினர் நியமனம்: SLPP எதிர்ப்பு

November 17, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்கள், கட்சியின் தலைமை

aq

​அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி

November 17, 2025

எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ‘அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி’ குறித்து ஊடகங்களை

aab

உலக ஆணழகன் போட்டி: தமிழக வீரர் வெற்றி

November 17, 2025

உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் திறன் கூட்டமைப்பு சார்பில், 16ம் உலக ஆணழகன் போட்டி நவ., 11ல் துவங்கி நேற்று

rai

தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை

November 17, 2025

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் நிலையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதனால், சென்னை, செங்கல்பட்டு உட்பட ஏழு

fe

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்; ஆளுங்கட்சி தலையீடு?

November 17, 2025

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில், அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ளதால், தயாரிப்பாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

ra

ஊழல் என்பது ஒரு சாதாரண விடயம் என்ற நிலை இலங்கையில் மாற்றப்படவேண்டும்!

November 17, 2025

1978ம் ஆண்டின் பின் இலங்கையில் ஊழல் என்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது, அதனை மாற்றி அமைக்க தற்போதைய அரசு

pana

பிரதேச சபையில் பதற்றம்

November 17, 2025

பாணந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்காக கூட்டப்பட்ட இன்றைய (17) அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களின்

chi

தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் பிரதமரின் கருத்து

November 17, 2025

தைவானுக்கு எதிராக சீனா பலத்தைப் பயன்படுத்தினால் ஜப்பான் ராணுவ ரீதியாகத் தலையிடக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி எச்சரித்து