கரைத்துறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வலைஞர்மடம் கிராமம் தனித் தீவாக மாறியுள்ளது!

முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வலைஞர்மடம் கிராமத்திற்கு செல்வதற்கான பிரதான வீதிகள் மற்றும் கிராமத்திலுள்ள உள்ளக வீதிகள் என்பன சீரின்மையால் குறித்த வலைஞர்மடம் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளதாக அந்தக் கிராமமக்களால் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் கிராமமக்களின் முறையீட்டினைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வெள்ளிக்கிழமை (16) வலைஞர்மடம் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு A-35 பிரதான வீதியிலிருந்து வலைஞர்மடத்திற்கு வருகைதரும் மாதா சந்தி வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதை இதன்போது கிராமமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரது கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் மக்கள் கிராமத்தைவிட்டு வெளியேறும் பிரதான மார்க்கமாக குறித்த வீதியே காணப்படுவதாகவும் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.

அந்தவகையில் குறித்த வலைஞர்மடம் மாதாசந்தி வீதி சீரின்றிக் காணப்பட்டதால் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போதும் படகுகளின்மூலமே மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டதாகவும், இவ்வீதி சீரின்றிக்காணப்படுவதால் இந்த வலைஞர்மடம் கிராமம் தனித்து விடப்பட்ட தீவாக மாறியுள்ளதாகவும் கிராம மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் தெரியப்படுத்தப்பட்டது.

எனவே தமது நிரையைக் கருத்திற்கொண்டு குறித்த வீதியை சீரமைப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கிராமமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

அத்தோடு பொக்கணை வலைஞர்மடம் இணைப்புவீதி, வலைஞர்மடம் சவக்காலை வீதி உள்ளிட்ட உள்ளக வீதிகளின் சீரமைப்புத் தொடர்பிலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கிராமமக்களால் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

மேலும் இதன்போது வலைஞர்மடத்தில் சுற்றுலா கடற்கரை ஒன்றினை ஏற்படுத்துவதுதொடர்பிலும் இதன்போது கிராமமக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் வலைஞர்மடம் கிராமமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், எழுத்துமூலமாக தம்மிடம் கோரிக்மைகளைக் கையளிக்குமாறு தெரிவித்ததுடன், மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை உரிய இடங்களுக்கு கொண்டு சென்று அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

குறித்த களவிஜயத்தில் கரைத்துறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ஜோசெப் மாசிலாமணி அவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய