கரவெட்டியில் அனுமதியின்றி நடமாடும் சேவையில் ஈடுபட முடியாது!

யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளுமாறும் , அவர்கள் தொடர்பில் தினக்குறிப்பேட்டில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் பிரதேச சபையின் பொறுப்பதிகாரிகள் மற்றும் வருமான வரி பரிசோதகர் ஆகியோருக்கு பிரதேச சபை தவிசாளர் பணித்துள்ளார்.

அத்துடன் , கரவெட்டி பிரதேச சபைக்குள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் அனைத்து வாகனங்களும் பிரதேச சபையில் முன் அனுமதியினைப் பெற வேண்டும். அது வாராந்தம் திங்கட்கிழமைகளில் புதுப்பிக்கப்படல் வேண்டும். உடனடியாக பதிவு செய்யப்படாத வாகன உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செயலாளர்  அறிவித்துள்ளார்.

வடமராட்சி பகுதிகளில் பழைய பொருட்களை வாங்கி விற்கும் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் வீடு வளவுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடாத்தாக எடுத்துச் செல்லும் பல சம்பவங்கள் பல்வேறு பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளன.

முதியவர்கள், பெண்கள், ஆளில்லாதவர்களின் வீடுகளை இனங்கண்டு வளவுக்குள் அத்துமீறி  நுழையும் பழைய பொருட்களை சேகரிக்கும் போர்வையில் வருவோர் கையில் அகப்படும் பொருள்களையெல்லாம் அடாத்தாக எடுத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இது தொடர்பில் கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்ஸநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்ற போது, நடமாடும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அனுமதியின்றி வீட்டு வளவுக்குள் நுழைவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டும் பிரதேச சபையின் அனைத்து பொறுப்பதிகாரிகளுக்கும் வருமானப் பரிசோதகர்களுக்கும் செயலாளரினால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிக்கள கடமையில் ஈடுபடும் சபையின் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் பாதுகாப்பை தங்கள் சமூகக் கடமையாகக் கருதி வீதியில் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்கள், சாரதிகளின் விபரங்களையும் தங்கள் தினக்குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

கரவெட்டி பிரதேச சபைக்குள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் அனைத்து வாகனங்களும் பிரதேச சபையில் முன் அனுமதியினைப் பெற வேண்டும். அது வாராந்தம் திங்கட்கிழமைகளில் புதுப்பிக்கப்படல் வேண்டும். உடனடியாக பதிவு செய்யப்படாத வாகன உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதேசசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வாகனம் சென்று வரும் இடங்களும் கோரிக்கை கடிதத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். குறித்த பிரிவின் பொலிஸ் நிலையத்துக்கு திரட்டப்படும் விபரங்கள் செயலாளர் ஊடாக அனுப்பி வைக்கப்படும். எக்காரணம் கொண்டும் மாலை 5.30 மணிக்கு பின்னர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.

நடமாடும் வியாபாரிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடுமாறும் செயலாளரினால் அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Judment

கொடிகாமம் குளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்; விசாரணைகளுக்கு உத்தரவு

November 18, 2025

யாழ்ப்பாணம் – கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும்

ko

மண்சரிவு அபாயம்

November 18, 2025

பெரகல-வெல்லவாய சாலையில் ஹல்துமுல்லவில் உள்ள கொஸ்லந்த கல்வெட்டுக்கு மேலே உள்ள மலையின் ஒரு பகுதி நேற்று திங்கட்கிழமை (17) காலை

ma

சிறைச்சாலையில் குழப்பங்கள் வெடிக்குமென சபையில் எச்சரிக்கை?

November 18, 2025

அதிகபடியான நெரிசலால் மெகசின் சிறைச்சாலை “வெடிக்கத் தயாராக” இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நீதி மற்றும்

ba

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

November 18, 2025

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட 50 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி காணியை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாகக் கூறப்படும்

aru

சுமந்திரன் சீற்றம்; அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும்

November 18, 2025

அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக்

pu)Nama

புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் – நாமல்

November 18, 2025

திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்

jup

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?

November 17, 2025

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை

sine

தொழில்முறை டென்னிஸ் சம்பியனான சின்னர்

November 17, 2025

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (16)

pri

18வது ஆண்டாக மீண்டும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்!

November 17, 2025

தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை