கம்போடியா மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்

தாய்லாந்து, கம்போடியா மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு இடையிலான எல்லை மோதல்களுக்கு மத்தியில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதன் காரணமாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தாய்லாந்து இராணுவப் பேச்சாளர் வின் தாய் சுவாரி இன்று (08) தெரிவித்துள்ளார்.

எல்லையில் கம்போடியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தாய்லாந்து வீரர் ஒருவர் உயிரிழந்ததாகத் தாய்லாந்து குற்றம் சாட்டியுள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கிடையில், இந்தத் தாக்குதல்கள் மீண்டும் நடத்தப்படுவதால், இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் முறிவடையும் அபாயமும் தற்போது எழுந்துள்ளது.

எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

அதற்கமைய, கைச்சாத்திடப்பட்ட இந்த அமைதி ஒப்பந்தம் சமீபத்திய தாக்குதல்களினால் ஆபத்தில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எல்லை தொடர்பான பிரச்சினையை மையமாக வைத்து கடந்த ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்ததோடு, இதனுடன் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் 817 கிலோமீட்டர் எல்லையை முற்றாக மூடுவதற்கும் தாய்லாந்து நடவடிக்கை எடுத்தது.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிய இந்த மோதல்கள் காரணமாக ஜூலை மாதத்தில் ஐந்து நாட்களில் 48 பேர் உயிரிழந்ததோடு, மேலும் சுமார் 300,000 பேர் இடம்பெயர்ந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

chinm

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

December 8, 2025

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு

chira

சிரஞ்சீவி – நயன்தாரா இணைவு

December 8, 2025

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின்

chami_1

பெண் விமானியின் கோரிக்கை; தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு

December 8, 2025

தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர்

nori

பிரித்தானியாவின் நொரிஸ் முதற் தடவையாக சம்பியனானார்

December 8, 2025

முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான்

sel

செல்டா விகோவிடம் தோற்ற றியல் மட்ரிட்

December 8, 2025

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-2 என்ற

chi

மனித நுகர்வுக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்

December 8, 2025

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல

water fal

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன?

December 8, 2025

நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு

nuw

டித்வா சூறாவளியால் விவசாயத் துறைச் சேதம்; ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

December 8, 2025

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர

kalv

கால்வாய்களை சீரமைக்கும் பணி

December 8, 2025

‘திட்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, சேதமடைந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை விரைவாக முன்னைய நிலைக்கு கொண்டுவந்து, வயல்கள்

ditv

மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய

dama

பாதகமான வானிலை; சேதமடைந்த இணைப்புகளை சேதப்படுத்த வேண்டாம்

December 8, 2025

தற்போதைய பாதகமான வானிலை காரணமாக பல பகுதிகளில் சேதமடைந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு டயலொக் ஆக்சியாட்டா, பொலிஸ்

nivara

நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்

December 8, 2025

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு