கனடாவின் தலைநகர் ஒட்டாவா மாநகரில் கடந்த 28-10-2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘தீபாவளித் திருநாள்’ விழாவில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்மற்றும் இந்தியச் சமூகம் சார்ந்த பிரதிநிதிகள். சமய ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள். குருமார்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் கனடிய வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் அனிற்றா ஆனந்த்துடன் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரிஉட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் அனிற்றா ஆனந்த், ஹரி ஆனந்தசங்கரியைப் பாராட்டியும் சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார் . ‘ எமது அமைச்சரவை சகாவான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் ஒரு அரசியல் தலைவர் என்றும் அத்துடன் ‘ஒரு அசத்தலான மனிதர்’ என்றும் எமது அமைச்சரைவையில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் முக்கிய பங்களிப்பையும் அவர்கள் வழங்கி வருகின்றார்” என்று புகழாரம் சூட்டிய அவர் அங்கு சமூகமளித்திருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து தனது உரையில் தீபாவளித் திருவிழாவின் புனிதம் பற்றியும் விளக்கமளித்தார்.
Markham Boxgrove Tamil Seniors Club அமைப்பின் தலைவி திருமதி சுந்தரேஸ்வரி யோகராஜா, அவரது கணவர் யோகராஜா, வர்த்தகப்பிரமுகர் மற்றும் BEHIND ME INTERNATIONAL MEDIA நிறுவன அதிபர் கனா செல்வா, வர்த்தக அன்பர் தனா யோகநாதன், உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம், கரிகாலன் மற்றும் பாலேந்திரா பெரியசாமி உட்பட மொன்றியால் வாழ் தமிழ் பேசும் அன்பர்களும் படங்களில் காணப்பெறுகின்றார்கள்.