வின்னிபெக் காவல் துறை தலைமையகத்தில் ஏற்பட்ட பெருமளவான நீர்ப்பெருக்கு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் ஒருவர் ஆணும் ஒருபெண்ணும் v(சேதப்படுத்தல்)விசாரிக்கப்பட்டுவருகின்றனர். இச்சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நகர மையத்தில் அமைந்துள்ள 266 கிரேஹாம் அவென்யூ அலுவலகக் கோபுரப் பகுதியில் சனிக்கிழமை மாலை நீர் சொட்டத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் இருவர் கோபுரக் கட்டிடத்தின் மேல்தள படிக்கட்டுப் பகுதிகளில் அமைந்திருந்த அவசர நீர் வழங்கல் வால்வுகளைத் திறந்ததன் விளைவாக பெருமளவான நீர்ப்பெருக்கு ஏற்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.
“நீர் கீழ்தளங்களுக்கு பெருமளவில் பாய்ந்தது; மேல்சாளரங்களிலிருந்தும் நீர் வழிந்தது. இச்சம்பவம் மிக விரைவாக இடம்பெற்றது,” என காவல் அதிகாரி டானி மெக்கின்னன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். “ அணைக்கட்டுகள் திறக்கப்பட்டது போலவே மேற்படி நிலைமை உருவானது” என்றும் அவர் கூறினார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை காவல் துறை அடையாளம் கண்டதாக தெரிவித்தது. கட்டிடத்தைச் சுற்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இரவு 11 மணிக்கு பின்னர் கிரேஹாம் அவென்யூவின் 200-ஆம் தொகுதிப் பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
51 வயதுடைய ஒருவரும் 36 வயதுடைய ஒருபெண்ணும் $5,000-ஐ மீறும் அளவிலான சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஆறு “மிஸ்சீஃப்” குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.