கனடா செல்லவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அந்த நாட்டின் உயர்ஸ்தானிகர் இஸபெல் மார்டினைச் சந்தித்து இரு தரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள கனடா உயர் ஸ்தானிகராலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.