கனடா துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் 18 வயதுடையவர் ?

கனடாவின் மேற்கு மாநிலமான பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பாடசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 08 பேர் உயிரிழந்ததோடு, 25 பேர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய நபர் சந்தேகநபராக பொலிஸாரால் அடையாள காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான ஜெஸ்ஸி வான் ரூட்ஸீலார் என்கின்ற இந்த நபர் சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்து கிடந்ததாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்டமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

முதலில் தனது வீட்டில் தாய் மற்றும் தம்பி ஆகியோரைச் சுட்டுக் கொன்ற சந்தேக நபர், பின்னர் அருகிலுள்ள பாடசாலைக்குச் சென்று அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

சந்தேக நபர் ஆணாக பிறந்து திருநங்கையாக மாறியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில், 39 வயதுடைய பெண் கல்வியாளர் ஒருவரும், 12 வயதுடைய பெண் மாணவர்கள் மூவரும், 12 மற்றும் 13 வயதுடைய ஆண் மாணவர்கள் இருவரும் அடங்குவர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சந்தேக நபர்கள் இருப்பதாக நம்பவில்லை என ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் பிரதி ஆணையாளர் டுவைன் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பாதிப்புகளுக்காகப் பலமுறை பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் இவர்களது வீட்டிற்குப் பல சந்தர்ப்பங்களில் பொலிஸார் அழைக்கப்பட்டனர். இதில் சில அழைப்புகள் மனநலம் சார்ந்தவையாகவும், ஆயுதங்கள் தொடர்பான முறைப்பாடுகளாகவும் இருந்துள்ளன.

சந்தேகநபருக்கு துப்பாக்கி உரிமம் இருந்ததாகவும், அது காலாவதியானது எனவும் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் தாக்குதல் நடத்திய பாடசாலையை விட்டு 04 ஆண்டுகளுக்கு முன்பு பாதியில் விலகியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

pe

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நுவரெலியாவில் மூடல்?

March 3, 2026

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றுக் காலை முதல் மூடப்பட்டுள்ளன.

crude

5 நாட்களில் 82 டொலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

March 3, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால்

ha

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய ஆணைக்குழு வேண்டும் – ஹக்கீம் எம்.பி

March 3, 2026

யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு

inla

ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

March 3, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் TIN சான்றிதழ் தொடர்பான புதிய நடைமுறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

up

தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

March 3, 2026

கொட்டகலை, யுலிபீல்ட் தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக குறித்த தோட்டத் தொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த

Suresh orema

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிக்க உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்க வேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்

March 3, 2026

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்கவேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாக

Thumi_1

இன்று நாட்டில் அரசியல் இலாபத்திற்காகவே மத – இன அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன – துமிந்த நாகமுவ

March 3, 2026

இன்று நாட்டில் பெரும்பான்மையாகச் சிங்கள பௌத்தர்கள் இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை

ud

குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்க விமானங்கள் சுடப்பட்டதா?

March 3, 2026

வைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் தவறுதலாகச் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க

arrest

போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

March 3, 2026

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (02)

death-pictures-4i5d2eg6pdb913xl

யாழ் குடத்தனையில் இளைஞன் தற்கொலை?

March 3, 2026

யாழ்ப்பாணம், குடத்தனை வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தன் உயிரை மாய்த்துக்

Duba

மூடப்பட்டிருந்த டுபாய் விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

March 3, 2026

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக மூடப்பட்டிருந்த டுபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான

Mano

ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் – மனோகணேசன்

March 2, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி