கனடாவில் ஆட்கடத்தல் அதிகரித்து வருவதாக கனேடிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2014 முதல் 2024 வரை, கனடாவில் 5,000க்கும் மேற்பட்ட மனித கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறித்த அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொண்டு அவர்களால் கட்டுப்படுத்தப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் தப்புவது கடினமாகிவிடுகிறது. இந்நிலையில், கனடாவில் ஆட்கடத்தல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, ஒன்ராறியோவிலுள்ள Guelph மற்றும் Thunder Bay ஆகிய நகரங்களில் தான் அதிக அளவில் ஆட்கடத்தல் நடைபெறுகிறது என கனடா புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக Guelphஇலும், அதற்கு அடுத்தபடியாக ஹாலிஃபாக்ஸ் மற்றும் Thunder Bay ஆகிய நகரங்களில்தான் அதிக அளவில் ஆட்கடத்தல் நடைபெறுவதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளியிடப்பட்ட ” கனடாவில் நபர் கடத்தல், 2024 ” என்ற ஜூரிஸ்டாட் என்ற அறிக்கையின் படி, 2014 முதல் 2024 வரை காவல்துறையினரால் பதிவான மனித கடத்தல் சம்பவங்களின் போக்குகள் மற்றும் பண்புகள் ஆராயப்பட்டுள்ளன.