இன்று செவ்வாய்க்கிழமை கனடாவின் வாட்டர்லூ பிராந்தியம், குவெல்ஃப் மற்றும் வெல்லிங்டன் கவுண்டி பகுதிகளில் கடும் குளிர் மற்றும் பனியைத் தூக்கும் வலுவான காற்று காரணமாக இரண்டு வானிலை எச்சரிக்கைகள் அமலில் உள்ளன.
செவ்வாய்க்கிழமை வெப்பநிலை –10°C-ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் காற்றின் தாக்கம் (wind chill) காரணமாக பிற்பகலில் –20°C வரை காலநிலை மாற்றம் பெறும்.
என்விரோன்மெண்ட் அண்ட் கிளைமேட் சேஞ்ச் கனடா வெளியிட்ட எச்சரிக்கையில், இவ்வளவு கடும் குளிர் நிலவும்போது சிறு குழந்தைகள், முதியவர்கள், நீண்டநாள் நோய்கள் உள்ளவர்கள், வெளியில் வேலை செய்வோர் அல்லது உடற்பயிற்சி செய்வோர், மேலும் போதுமான அடைக்கலம் இல்லாதவர்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“உடலை முழுமையாக மூடிக்கொள்ளுங்கள். வெளிப்படையாக இருக்கும் தோலில், குறிப்பாக காற்றின் தாக்கம் இருந்தால், சில நிமிடங்களிலேயே பனிக்காயம் (frostbite) ஏற்படலாம்,” என எச்சரிக்கை தெரிவிக்கிறது. மேலும், வாகனங்களில் கூடுதல் போர்வைகள், ஜம்பர் கேபிள்கள் போன்ற அவசரப் பொருட்களை வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி வார இறுதி வரை கடும் குளிர் நீடிக்கும் என வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. சனிக்கிழமை –9°C ஆகவும், ஞாயிற்றுக்கிழமை –6°C ஆகவும் வெப்பநிலை உயரக்கூடும் என்றும் தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.