கட்சியை எழுச்சி கொள்ள வைப்பதற்கு தயாராகுங்கள் – டக்ளஸ் தேவானந்தா

தேசிய மாநாட்டினை நடாத்தி கட்சி எழுச்சி கொள்ள வைப்பதற்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகளை எதிர்காலம், நாம் நேசிக்கின்ற மக்களுக்கு வெளிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற கலந்துரையாடலில், தன்னுடைய கைது மற்றும் சமகால அரசியல் தொடர்பாக கட்சி செயற்பாட்டாளர்களுக்கு தெளிபடுத்தும்போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும், மாற்றம் பற்றிய எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்களுக்கு இதுவரையில் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத நிலையே தொடருகின்ற போதிலும், பல்வேறு சவால்கள் மிகுந்த சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் வழக்க வேண்டும் என்பதே. நியாயமான நிலைப்பாடாக இருக்கும்.

ஆனால், எந்தவொரு அரசும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் தாம்பாளத் தட்டில் ஏந்தி வந்து தாமாக தரப்போவதில்லை. எமது நண்லெண்ண சமிஞ்ஞையாலும் சினேக பூர்வ உரையாடலாலும் தேசிய நல்லிணக்க வழிநின்றே நாமே எதையும் பெற வேண்டும்.

கடந்த கால அரசுகளும் நாம் கேட்டதற்கிணங்கவே பலவற்றிக்கும் தீர்வு தந்தார்கள். கடந்த காலங்களில் போதிய அரசியல் பலம் எமக்கு இருந்திருந்தால் முழுமையாக எதையும் பெற்றிருக்கலாம்.

கடந்த கால அரசுகளோடு நாம் ஆட்சிகளில் பங்கெடுத்திருந்தாலும் அவர்களோடும் எமக்கு முரண்பாடுகள் இருந்தன. ஆனாலும் பேசித்தீர்ப்பதற்கு ஒரு தளம் இருந்தது.

நாம் ஆட்சிகளில் பங்கெடுத்தமையே அந்த தளம். கடந்த கால அரசுகளை போலவே இந்த ஆட்சியோடும் எமக்கு முரண்பாடுகள் உள்ளன. ஆனாலும் எதிர்ப்பு அரசியல் நடத்துவோரைப்போல் நாமும் அரசை கடும்போக்கில் விமர்சிங்க முடியாது.

இந்த அரசாங்கமும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் தரவில்லையென்றால் அதற்கு இந்த அரசு காரணம் என்று கூறிவிட முடியாது. கடந்த கால அரசுகளோடு நாம் எவ்வாறு கேட்டு பெற்றோமோ, அது போலவே இந்த அரசுடனும் பேசியே பெற வேண்டும்.

ஆளும் கட்சி சார்ந்த தமிழ் எம் பிக்கள் அரசுக்குள் கரைந்தே போயுள்ளனர். அவர்களுக்கு அந்த ஆற்றல் அனுபவம் அக்கறை கிடையாது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே ஆளும் கட்சி தமிழ் எம்பிக்கள் தவிர்க்க முடியாமல் நிற்பார்கள்.

ஆகவே நாமே அரசுடன் பேச வேண்டும். அதற்கு எமக்கு பிரதிநித்துவம் இல்லை. அரசோடு பேச வல்ல அதிகாரம் இல்லை. எதிர்காலத்தில் எமது மக்கள் அந்த ஆணையை வழங்கும் பட்சத்தில் இந்த அரசுடனும் நாம் எதையும் பேசித்தீர்க்கும் தளம் உருவாகும்.

மேலும், கட்சியின் தேசிய மாநாட்டினை நடாத்தி கட்சி கட்டமைப்புக்களை சீராக்குவதுடன் எங்களுடைய பலவீனங்களை அடையாளப்படுத்தி சீர்செய்வதன் மூலம் கட்சியை எழுர்ச்சி கொள்ள வைக்க முடியும் எனவும் அதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும் என்றார்.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு