கட்சியில் என்ன நடக்கிறது என்ற குழப்பத்தில் காங் தலைவர்கள்!

‘என்ன நடக்கிறது கட்சியில்…’ என, காங்., மூத்த தலைவர்கள் கொந்தளிக்கின்றனர். பீஹார் சட்டசபை தேர்தல் படுதோல்விக்கு பின், காங்கிரசின் நிலை என்னவாகும் என, இவர்கள் கவலையில் உள்ளனர். ஆனால், எது குறித்தும் கவலைப்படாமல், வெளிநாடு பயணத்தில் கவனமாக உள்ளார் ராகுல்’ என, அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

சமீபத்தில், ராகுல் தலைமையில் லோக்சபா காங்., – எம்.பி.,க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பார்லிமென்டில் எம்.பி.,க்கள் எப்படி பேசினர், அடுத்து பா.ஜ.,வை அவையில் எப்படி மடக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், திருவனந்தபுரம் காங்., – எம்.பி., சசி தரூர் பங்கேற்கவில்லை.

‘வெளியூரில் ஏற்கனவே ஒத்துக்கொண்ட நிகழ்ச்சி உள்ளது’ என, சாக்கு சொல்லிவிட்டாராம் தரூர். இதற்கு முன்பாகவும் ஒருமுறை, ராகுல் தலைமையில் நடந்த கூட்டத்திலும் இவர் பங்கேற்கவில்லை. ‘கொல்கட்டாவில் இருக்கிறேன்’ என, அப்போதும் சொல்லி தப்பித்துவிட்டாராம் தரூர். இப்படி முக்கிய கூட்டங்களில் பங்கேற்பதை அவர் தவிர்த்து வருகிறார்.

ஏற்கனவே மோடிக்கு நெருக்க மானவராகி விட்டார் தரூர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, ஜனாதிபதி விருந்து அளித்தபோது ராகு லை அழைக்காமல், தரூரை மோடி அரசு அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘தரூரை அழைத்து, ராகுல் தனியாக பேசியிருக்க வேண்டும்’ என பல மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால், ராகுலோ கட்சியினரை சந்திக்க தயாராக இல்லை.

ஒடிஷாவின் முன்னாள் எம்.எல்.ஏ., முகமது; இவர் குடும்ப மே காங்கிரஸ் குடும்பம். இவர் ‘கடந்த மூன்று ஆண்டுகளாக ராகுலை சந்திக்க முயற்சித்து வருகிறேன்; ஆனால் முடியவி ல்லை. தொண்டர்களுக்கும், தலைமைக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. 83 வயதான காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவால், கட்சியின் இளைஞர்களுக்கு சரியாக வழிகாட் ட முடியவில்லை’ என்று கோபமாக, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாவிற்கு நீண்ட கடிதம் எழுதிஉள்ளார்.

இன்னொரு பக்கம், ராகுலின் கொள்கைகள் குறித்தும் கேள்விகள் எழுப்புகின்றனர் மூத்த தலைவர்கள். ‘ஏழைகளின் பக்கம் காங்கிரஸ் என, பிரதமர்களாக இருந்த இந்திரா, ராஜிவ் காலத்திலிருந்து கொள்கை உள்ளது. ஆனால், ஜாதிகளிடையே பிரிவினையை உண்டாக்கி வருகிறார் ராகுல்.

பிற்பட்டவர்கள், பட்டியலினத்தவர் என, ஒருசாராரை மட்டும் ஓட்டு வங்கியாக நினைத்து செயல்பட்டு வருகிறார். இதன் விளைவு தான், பீஹார் தேர்தலில் படுதோல்வி. இப்படி பிரிவினையை உண்டாக்கக் கூடாது’ என, நொந்துபோய் சொல்கின்றனர் காங்., மூத்த தலைவர்கள்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்