கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிகப் பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலை – அமைச்சர் சந்தன அபேரத்ன

சர்வதேச தரவுகளின்படி கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிகப் பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலைக்குரியது. ‘செழிப்பான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதை நடைமுறைக்கு செயற்படுத்த வேண்டுமாயின் பிளாஸ்டிக் அச்சுறுத்தலற்ற அழகான சூழலை உருவாக்குவது அவசியமாகும். மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

இலங்கையில் பாரிய சுற்றுச்சூழல் பிரச்சினையாக மாறியுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைக்கும் ‘நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு’ மற்றும் மீளச் சேகரிக்கும் மூலோபாய மாதிரி தொடர்பான விசேட விழிப்புணர்வு செயற்திட்டம் புதன்கிழமை (11) கொழும்பில் நடைபெற்றது.

அரச நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மேல்மாகாணத்தின் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

மக்கள் இயற்கைப் பொருட்களால் ஆன பொதியிடல் முறைமைகளையே பயன்படுத்தினர்.கடந்த சில தசாப்தங்களாக நிலவும் தவறான மனப்பாங்கு காரணமாக பிளாஸ்டிக் பாவனைக்கு அடிமையானதால், பாரிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நெருக்கடிகளுக்கு சமூகம் என்ற அடிப்படையில் முகங்கொடுத்துள்ளோம்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, பிளாஸ்டிக் மற்றும் அது சார்ந்த உற்பத்திப் பொருட்களால் நீண்டகால அடிப்படையில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, யுத்தம் அல்லது தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புக்களை காட்டிலும் அதிகமாக இருக்கலாம்.

பிளாஸ்டிக் பாவனையின் தற்போதைய நிலையை அவதானிக்கும்போது, வருடாந்தம் 1.6 மில்லியன் மெற்றிக்தொன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன.தினசரி கழிவு அளவு சுமார் 938 மெற்றிக்தொன்களாகும். சூழலில் இருந்து 32 சதவீதம் மட்டுமே சேகரிக்கப்படுகிறது.மொத்தக் கழிவுகளில் 4 சதவீதம் மட்டுமே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த சமநிலையின்மையால், சர்வதேச தரவுகளின்படி கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிக பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலைக்குரியது.

அனுராதபுர காலத்தில் மன்னர் பண்டுகாபயன் கழிவு முகாமைத்துவத்துக்காக விசேட குழுக்களை நியமித்த வரலாறும் காணப்படுகிறது. பௌத்த தர்மத்தில் உள்ள ‘வனரோப சூத்திரம்’ ஊடாக சூழல் பாதுகாப்பு என்பது இரவும்,பகலும் புண்ணியம் சேர்க்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது. அன்றைய சமூகம் பனை ஓலை மற்றும் இயற்கை பொதியிடல்களைப் பயன்படுத்தியது. ஆனால் இன்று வசதி மற்றும் இலாபம் ஆகியவற்றை தேடிச் சென்றதால் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகையாகியுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைய ‘செழிப்பான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதை நடைமுறைக்கு செயற்படுத்த வேண்டுமாயின் பிளாஸ்டிக் அச்சுறுத்தலற்ற அழகான சூழல் அவசியம்.மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

Sathe

மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன்

March 13, 2026

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13)

c

பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நியாயமான தீர்வை வழங்குவார் – மின்சார தொழிற்சங்கங்கள்

March 13, 2026

தொழிற்சங்கத்தினர் இன்று (13) நண்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதுடன், அந்தப் பேச்சுவார்த்தைகள்

dammika ranathunga

ஊழல் குற்றச்சாட்டு; பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

March 13, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவிற்கு, அழைப்பாணை (Notice) கிடைக்கப்பெறும்

kan

இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை; சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராய்கிறோம் – கனிமொழி

March 13, 2026

சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் ‘இந்திய வம்சாவளி தமிழர்கள்’ என்ற பதத்துக்கு மேலதிகமாக ‘இலங்கைத் தமிழர்கள்’ எனும் பதத்தையும் உள்வாங்குவதன்

chand

கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிகப் பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலை – அமைச்சர் சந்தன அபேரத்ன

March 13, 2026

சர்வதேச தரவுகளின்படி கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிகப் பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலைக்குரியது. ‘செழிப்பான நாடு

For em

வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட அறிவிப்பு

March 13, 2026

இந்த ஆண்டின் முதல் 2 மாத காலப்பகுதியில், புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி நடவடிக்கைகளுக்காக 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம்

arr

போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

March 13, 2026

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹேஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று

Harini-amarasooriya

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே!

March 13, 2026

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப்

44

கனடா பீல் பிராந்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு

March 13, 2026

பீல் பிராந்திய காவல்துறை ( Peel Regional Police) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தி,

sas

ஊழல் குற்றச்சாட்டு; சஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணை நிறைவு

March 13, 2026

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க

savithri pol

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ‘அவள் வாழ்வின் உயிர்நாடி’

March 13, 2026

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா

nil

மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று கண்டறியப்பட்டது

March 13, 2026

இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று மாத்தறை – பிட்டபெத்தர பகுதியில்