கடந்த 10 வருடகால பகுதியில் 16-22 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் குற்றச் செயல்கள் அதிகரிப்பு!

கடந்த 10 வருடகால பகுதியில், 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் குற்றவியல் நடத்தைகள் அதிகரித்துள்ளதாக சட்ட உளவியல் விசேட வைத்திய நிபுணர் தாரக பெர்னாண்டோ தெரிவிக்கின்றார்.

இது தற்போது எமது நாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், உலகம் முழுவதிலும் இந்த நிலைமையை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய மனநல நிறுவகம் 100 ஆண்டுகளை பூர்த்தி செய்வதை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வைத்தியர் தாரக பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு அண்மித்த காலப்பகுதியின் புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது, நீதிமன்றத்தினால் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 200 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது ஒரு பேரழிவு நிலைமை எனவும், இது இப்படியே தொடருமாயின் எதிர்காலத்தில் 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்டவர்களால் சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் எனவும் வைத்தியர் வலியுறுத்தினார்.

அத்துடன் மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள் என்ற கருத்து சமூகத்தில் வேரூன்றியுள்ளதாகவும், அது முற்றிலும் தவறான கட்டுக்கதை என்றும் வைத்தியர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இத்தகைய நபர்களைத் திறந்த மனதுடன் நோக்கி, அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்குவதன் ஊடாக அவர்களை மாற்றியமைக்க முடியும் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இத்தகைய நபர்களிடம் ஆக்கபூர்வமான திறன்கள் காணப்படுவதாகவும், அவர்கள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தும் ஆற்றலை வேறு விடயங்களில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்க முடியும் எனவும் சட்ட உளவியல் விசேட வைத்திய நிபுணர் தாரக பெர்னாண்டோ கருத்து வெளியிட்டார்.

இத்தகையவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பதற்கு விஞ்ஞான ரீதியான முறைகளைப் பின்பற்றிச் செயற்பட வேண்டும் எனவும் தாரக பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய சட்ட உளவியல் மருத்துவப் பிரிவு எமது நாட்டில் அமைந்துள்ளதாகவும் வைத்தியர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட வைத்தியர், நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்படும் நோயாளிகள் அந்தக் குற்றத்தைச் செய்த நேரத்தில் அவர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதைக் கண்டறிதல், நீதிமன்றத்தில் அவர்களால் மீண்டும் வாதாட முடியுமா என்பதை ஆராய்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியன சட்ட உளவியல் மருத்துவப் பிரிவின் பணிகளாகும் எனத் தெரிவித்தார்.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது