ஒரு படம் ‘ஹிட்’ அடித்ததும் நாம் பெரிய ஆள் என்று நினைத்து விடக் கூடாது – நந்திதா ஸ்வேதா

‘அட்டக்கத்தி’ படத்தில் அறிமுகமாகி ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘அசுரவதம்’, ‘கபடதாரி’, ‘ரத்தம்’, ‘ரணம்’ போன்ற பல படங்களில் நடித்தவர் நந்திதா ஸ்வேதா. தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வரும் நந்திதா ஸ்வேதா, தற்போது தமிழ் – தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். புதிய வெப் தொடர்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நந்திதா ஸ்வேதா தனது திரைப்பயணம் குறித்து பகிர்ந்தார். அதன் விவரம் இதோ… “நான் ஒரு சினிமா வெறி பிடித்தவள். சிறுவயதில் இருந்தே சினிமா பைத்தியம் என்றுகூட சொல்லலாம். உனது ஆசை என்ன? என்று யார் கேட்டாலும், நடிகை ஆகப் போகிறேன் என்று தயங்காமல் கூறுவேன். நிகழ்ச்சி ஒன்றில் என்னை சந்தித்த இயக்குனர் விஜயகுமார், என்னை அவரது இயக்கத்தில் வெளியான `நந்தா லவ்ஸ் நந்திதா’ என்ற கன்னட படத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டேன்.

சினிமாவில் எதுவும் நிரந்தரம் கிடையாது. ஒரு படம் ‘ஹிட்’ அடித்ததும் நாம் பெரிய ஆள் என்று நினைத்து விடக் கூடாது. அதுதான் மிகப்பெரிய பொய். ஒரே படத்தில் யாருமே கோடி கோடியாக சம்பாதிக்க முடியாது. படிப்படியாகவே ஒரு நிலையை பிரபலங்கள் அடையமுடியும். சாதனையில் மட்டுமல்ல, சம்பளத்திலும் தான்.

நான் முதல் படம் நடித்துவிட்டு 3 ஆண்டுகள் படிக்க சென்றுவிட்டேன். கல்லூரி முடித்தபிறகு நடித்த படம் தான் `அட்டகத்தி’. நான் நடித்ததிலேயே ‘அட்டகத்தி’ தான் எனக்கு பிடித்த படம். அந்த படம் தான் எனக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதனை தொடர்ந்து ‘எதிர்நீச்சல்’, ‘உள்குத்து’ படங்களில் நடிக்கும்போது பலர் இந்த படங்கள் வேண்டாம் என்றார்கள். மீறி நடித்தேன். அந்த படங்கள் ‘ஹிட்’ அடித்தன. சில படங்கள் நம்பி நடித்தும் கைகொடுக்கவில்லை. வெற்றி, தோல்வி இரண்டுமே இரண்டற கலந்தது தான் சினிமா.

சினிமாவில் நான் கற்றுக்கொண்ட பெரிய பாடம் பொறுமை தான்.வேண்டாம் என்று உதறித் தள்ளிய படங்கள் நிறைய வெற்றி பெற்றுள்ளன. ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. முடிந்தது முடிந்தது தான். அதற்காக கவலைப்பட்டு கிடப்பது முட்டாள்தனம். அடுத்தது என்னவென்று போய்க்கிட்டே இருக்கவேண்டும். கவர்ச்சியாக நடிப்பேன், நடிக்கமாட்டேன் என்றெல்லாம் முடிவு எடுத்து வைத்துக்கொள்வது கிடையாது. கதைக்கு தேவைப்பட்டால் எந்த மாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயார்”. என்றார்.

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்

nug

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு

November 17, 2025

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள

uthaya

அரசாங்கம் செல்லும் வழி முறையற்றது – உதய கம்மன்பில

November 17, 2025

திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை