ஒட்டாவா–ஹெட்டினோ பகுதியை கடுமையான பனிப்புயல் தாக்கியதால் இன்று செவ்வாய்க்கிழமை காலை பத்தாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி சிரமத்துக்காளாகினர் எனவும் நெடுஞ்சாலை 401 இன் நான்கு பகுதிகளும் மூடப்பட்டன எனவும் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரேஸ்ஃபீல்டின் தெற்கில் உள்ள அவுட்டாவே பகுதியில் பனிச்சுழல் எச்சரிக்கை அமலில் உள்ளது. அதே சமயம், தெற்கு பிரின்ஸ் எட்வர்ட் கவுண்டியில் திங்கட்கிழமை தொடங்கிய காற்று எச்சரிக்கை தொடர்கிறது; காலை வேளையில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்றடிக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
செயின்ட் லோரன்ஸ் நதி மற்றும் லேக் ஒன்டாரியோ அருகிலுள்ள பகுதிகளில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்றடிக்கலாம் என்று சிறப்பு வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
ஹைட்ரோ ஒன், ஒட்டாவா மற்றும் குவெபெக் நிறுவனங்களின் தகவலின்படி, காலை 7 மணி நிலவரப்படி 40,000க்கும் மேற்பட்ட உள்ளூர் வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி இருந்தனர்.
மேற்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலை 401, நபெனீ பகுதியில் பேலஸ் ரோடிலிருந்து சென்டர் ஸ்ட்ரீட் வரை, கிங்ஸ்டனில் கார்டினர்ஸ் ரோடில், மற்றும் கணனோக்கே அருகிலுள்ள கவுண்டி ரோடு 2 இல் ஏற்பட்ட விபத்துகளால் மூடப்பட்டுள்ளது.
கிழக்கு நோக்கி செல்லும் 401, கார்டினர்ஸ் ரோடிலிருந்து கேம்டன் ஈஸ்ட் ரோடு வரை மூடப்பட்டுள்ளது என்று ஒன்டாரியோ போக்குவரத்து அமைச்சகம் (MTO) தெரிவித்துள்ளது.
MTO-வின் தகவலின்படி, கிங்ஸ்டன் அருகிலுள்ள ஹைவே 15 மற்றும் ஹைவே 401 பெரும்பாலும் பனியால் மூடப்பட்டுள்ளன;பாதைகளில் தெளிவு குறைவாக உள்ளது. நெடுஞ்சாலை 7 மற்றும் 416 இன் சில பகுதிகளும் பகுதியளவில் பனியால் மூடப்பட்டுள்ளன.
கட்டினோ மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை 5, 50 மற்றும் 148-க்கும் இதே நிலைமை உள்ளது என்று குவெபெக் தெரிவித்துள்ளது.