ஐரோப்பிய ஒன்றியம்-இலங்கை: 27வது கூட்டு ஆணையக் கூட்டம்

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் இலங்கை ஆகியவை ஐரோப்பிய ஒன்றியம்- இலங்கை கூட்டு ஆணையக் கூட்டத்தின் 27வது அமர்வை கொழும்பில் 2026, பெப்ரவரி 12, அன்று, கூட்டின.

நட்பு மற்றும் திறந்ததொரு மனப்பாங்கின் அடிப்படையில் நடைபெற்ற இக்கூட்டம், இருதரப்பு உறவுகளை மீளாய்வு செய்து, ஆளுகை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் முதல் வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, கல்வி,மீன்வளம், கடல்சார் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, மீளனுமதி மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு வரையிலான இருதரப்பு ஆர்வமுள்ள பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் மற்றும் இற்றைப்படுத்தல்களைப் பரிமாறிக் கொண்டது.

இக்கூட்டம், இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிக்க இரு தரப்பினருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்களில் இரு தரப்பினரும் எடுத்த கொள்கைசார் சீர்திருத்தங்கள், நடைமுறை மேம்பாடுகள் மற்றும் சட்டரீதியான முயற்சிகள் குறித்த இற்றைப்படுத்தல்களை வலியுறுத்தியது.

2025, மே 5 அன்று நடைபெற்ற ஆளுகை, மனித உரிமைகள் மற்றும் சட்ட ஆட்சி குறித்த ஐரோப்பிய ஒன்றிய- இலங்கை செயற்குழு, 2025, நவம்பர் 13 அன்று மெய்நிகர் முறையில் நடைபெற்ற வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த செயற்குழு மற்றும் 2026, பெப்ரவரி 11 அன்று நடைபெற்ற அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்த செயற்குழு ஆகியவற்றின் பணிகளை கூட்டு ஆணையம் ஆய்வு செய்தது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இரத்து செய்யப்பட்டமை நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் (OSA) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமை, சிறுபான்மையினரின் உரிமைகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கருத்து மற்றும் சங்க சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் இலங்கையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கூட்டு ஆணையத்தின் கலந்துடையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சுயாதீன தேசிய நிறுவனங்கள், குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம் (OMP), இழப்பீட்டு அலுவலகம் (OR) மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றால் ஆற்றப்படும் வலுப்படுத்தப்பட்ட வகிபாகம் குறித்தும் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெரிவித்தது.

சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதிலும் நீக்குவதிலும், மீன்வளத் துறையில் உள்ள உறுதிமொழிகளை மதிப்பதிலும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். மேலும், எராஸ்மஸ்+ மற்றும் ஹொரைசன் ஐரோப்பா கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்தனர். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஒத்துழைப்பு, அத்துடன் புலம்பெயர்வு மற்றும் மீளனுமதிக் கொள்கைகள் குறித்தும் பயானுறுதிமிக்க பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.

பாதுகாப்புத் துறையில், குறிப்பாக இந்து-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்தன.

அடுத்த கூட்டு ஆணையக் கூட்டத்தை 2027 ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸில் கூட்டுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி அருணி ரணராஜ மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவையில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி பாவோலா பம்பலோனி ஆகியோர் இணை தலைமை தாங்கினர்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய