ஏற்றுமதி அபிவிருத்தி சபை புதிய மூலோபாயங்களை முன்வைப்பு

இலங்கையின் ஏற்றுமதித் துறை புதுப்பிக்கப்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏற்றுமதியாளர்களுடன் இணைந்து உற்பத்தியை மேம்படுத்துதல், சந்தை அணுகல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கான ஆதரவு என்பவற்றை வலுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்தது.

பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில், கடந்த நவம்பர் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் வழிவகைகள் பற்றிய குழு கூடியபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் ஏற்றுமதிகள் ஒரு தசாப்தமாக அண்ணளவாக 13 – 15 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்டதாக இருந்ததாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்தார். ஆனால் அண்மைய சீர்திருத்தங்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட திட்டங்கள் இந்தத் துறை அதிக வளர்ச்சியை நோக்கிச் செல்ல உதவுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) புதிய தேசிய மூலோபாயங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் பிரதான ஆலோசனைக் குழுக்களை மீண்டும் செயல்படுத்தியுள்ளதுடன், தொழிற்துறைக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் தெளிவான செயற்திறன் இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஏற்றுமதியாளர்களில் 78%ஆக உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) பங்களிப்பை அதிகரிப்பது ஒரு முக்கிய முன்னுரிமை என்றும், எனினும் அவை மொத்த ஏற்றுமதி வருமானத்தில் ஒரு சிறிய பங்களிப்பை மாத்திரமே செய்கின்றன என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, பிராந்திய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உதவிச் சேவைகள் மூலம் இந்தப் பங்களிப்பை கணிசமாக விரிவுபடுத்தும் இலக்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) எவ்வாறு கொண்டுள்ளது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு பெரிய சர்வதேச தொழில்துறை கண்காட்சியை நடத்துவதற்கு இலங்கை தயாராகி வருவது தொடர்பிலும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.

அண்மைய ஆண்டுகளில் வலுவான செயற்றிறனை எடுத்துக்காட்டும் வகையில் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், இலங்கை ஏற்றுமதியில் 16 – 17 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டுவதற்கான பாதையில் உள்ளது என இங்கு தெரிவிக்கப்பட்டது.

நாடு தனது அடுத்த மைல்கல்லான 20 பில்லியன் அமெரிக்க டொலர்களை நோக்கி நகரும்போது, தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகல் மற்றும் வலுவான தொழில் ஒத்துழைப்பு ஆகியவை இன்றியமையாததாக இருக்கும் என்று ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) தெரிவித்தது.

இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க, கே. சுஜித் சஞ்சய பெரேரா, சதுர கலப்பத்தி, செல்லத்தம்பி திலகநாதன், சமிந்த ஹெட்டியாராச்சி, நிஷாந்த ஜயவீர, சந்தன சூரியாரச்சி, திலின சமரகோன் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையை (EDB) பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

fr

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

December 6, 2025

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச

ca

வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள

v

உயிரிழந்த விலங்குகளை கையாள்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள்

December 6, 2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த

central-bank

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

December 6, 2025

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய

Dead

காணிப் பிரச்சினை; ஒருவர் பலி

December 6, 2025

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக

ditva

வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்த கழிவுகள் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்

December 6, 2025

சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய

ran

மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

December 6, 2025

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே

siva

சிவனொளிபாத மலை யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 6, 2025

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க