உள்ளக வீதிச் சீரமைப்புப் பணிகளை விரைவில் ஆரம்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்து

மன்னார் – சிவாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட காயாக்குழி கிராமத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 8.7 கிலோமீற்றர் தூரமான உள்ளகவீதிச் சீரமைப்புப்பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதால் மக்கள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த சீரமைப்புப்பணிகளை விரைந்து ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

சிலாவத்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை (03) இடம்பெற்ற நிலையில் குறித்த கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு வலியுறுத்தினார்.

இந்நிலையில் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள குறித்த உள்ளகவீதிச் சீரமைப்புப்பணிகள் விரைந்து ஆரம்பிக்கப்படுமென பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், காயாக்குழி பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டுதொடங்கப்பட்ட சுமார் 8.7கிலோமீற்றர்தூரமான உள்ளக வீதிச் சீரமைப்பு வேலைகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதி மக்கள் போக்குவரத்து செய்வதில் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதுடன், அப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்குவதாலும் பாதிப்புக்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

அவர்கள் எதிர்நோக்கும்பிரச்சினைகள் தொடர்பில் நானும்நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தேன். எனவே குறித்த வீதியைச் சீரமைப்புவேலைகள் முழுமைப்படுத்தப்படவேண்டு மெனக்கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

இந்நிலையில் இதற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன பதிலளிக்கையில், உள்ளகவீதிகளை சீரமைப்பதுதொடர்பிலே அதிக கவனம் செலுத்தப்பட்டுவருகின்றது. குறிப்பாக வீதிச்சீரமைப்புகளுக்கென அதிகளாவான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வீதிச் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையிலே அடுத்த ஆண்டுக்குரிய வரவுசெலவுத்திட்டத்திலும் வீதிகள் சீரமைப்பிற்கென அதிகளவு நிதிஒதுக்கீடுசெய்யப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் சுட்டிக்காட்டப்பட்ட வீதிதொடர்பிலும் கவனஞ்செலுத்தப்படும். அவ்வீதி சீரமைக்கப்படும் என்றார்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த