உலகம் தழுவிய ரீதியில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – சட்டத்தரணி ஜோதிலிங்கம்

அரசியல் கைதிகளின் விவகாரத்தை அடையாள ரீதியாக செய்யாமல், உலகம் தழுவிய ரீதியில் செய்ய வேண்டும். ஏனெனில் தேசிய இனப் பிரச்சினையை என்பது சாராம்சத்தில் உள்நாட்டு பிரச்சினை அல்ல. இதுவொரு சர்வதேச பிரச்சினை என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று(31.01.2026) மாலை யாழில் நடைபெற்ற “நீதிக்கான சாட்சி” என்ற நூதன முறையிலான போராட்டத்தில் கலந்துகொண்டு நீதிக்கான சாட்சி உரைக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,அரசியல் கைதிகளின் போல சொந்த நலனுக்காக சிறைகளுக்குள் சென்றவர்கள் அல்ல. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்தவர்கள் என்ற வகையிலேயே அவர்கள் இவ்வாறு சிறைவாசத்தை அனுபவிக்கின்றனர்.

அவர்கள் அரசியல் கைதிகள் என்பதை இந்த அரசை நாங்கள் முதலில் ஏற்க செய்ய வேண்டும். இந்த அரசாங்கம் மாத்திரம் அல்ல இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் அரசியல் கைதிகள் என்று ஏற்காத நிலையே காணப்படுகிறது.

இந்த அரசாங்கத்தின் நீதி அமைச்சர் கூட ஒரு தடவை அரசியல் கைதி என்று எவரும் இல்லை என்று கூறியுள்ளார். இந்தக் கூற்றுக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

அரசியல் கைதிகளின் விவகாரம் என்பது தமிழ் மக்களின் பொது விவகாரம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொண்டு அதனை தமிழ் மக்கள் பொறுப்பெடுக்க வேண்டும்.

அரசியல் தலைமைகள் இதனை பொறுப்பெடுக்க வேண்டும். துரதிஷ்டவசமாக எங்களுடைய அரசியல் தலைமைகள் இதனை பேசுவதையே அதிகமாக நிறுத்திக் கொண்ட நிலை தான் காணப்படுகின்றது.

அவர்கள் நினைத்திருந்தால் வலிமையாக செயல்பட்டு இந்த அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அந்த முயற்சியை ஒரு வலுவானதாக செய்யவில்லை.

ஆகவே, அதற்காக நாங்கள் ஒரு அழுத்தத்தினை வழங்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இந்த அரசானது அச்சப்படுகின்ற ஒரே ஒரு விடயம் தமிழ் மக்களுடைய உலகளாவிய ரீதியிலான அரசியல் போராட்டம் தான்.

இதற்கு உதாரணம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி குறித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டமே. அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தியபோது தமிழ்நாட்டில் அது தொடர்பான போராட்டம் வளர்ந்தது. தமிழ்நாட்டில் இவ்வாறு வளர்ந்த போது புலம்பெயர் நாடுகளில் அந்த போராட்டம் வளர்ந்தது.

அன்று தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து கொண்டிருந்த ஒரு காலம். இதன்போது உடனடியாகவே இந்திய தூதுவர் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவை அழைத்து இந்தப் போராட்டத்தை உடனடியாக நிறுத்துங்கள் என கூறியிருந்தார். ஏனென்றால் இது எங்களுக்கு பிரச்சினை என இந்திய தூதவர் கூறியிருந்தார்.

ஆகவே தமிழ் மக்களுடைய உலகளாவிய அரசியல் போராட்டத்திற்கு அரசு பயப்படுகின்றது.

காணிப் பிரச்சினையாக இருக்கலாம், அல்லது இன்று நடைபெறுகின்ற ஆக்கிரமிப்புகளாக இருக்கலாம், அரசியல் கைதிகளின் விடயமாக இருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டோருடைய விடயமாக இருக்கலாம் அனைத்துப் பிரச்சினைகளையும் உலகம் தழுவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இவ்வாறு நாங்கள் உலகம் தழுவிய ரீதியில் நாங்கள் முன்னெடுப்பதாக இருந்தால் முதலில் தாயகத்தில் ஒரு கொதிநிலை வேண்டும். தாயகத்தில் கொதிநிலை உண்டானால் தான் தமிழகத்தில் கொதிநிலை உண்டாகும்.

தமிழகத்தில் கொதிநிலை உண்டானால் தான் உலகம் தழுவிய ரீதியில் கொதிநிலை உண்டாகும். ஆகவே தாயகத்தில் ஒரு கொதிநிலையை எவ்வாறு நாங்கள் உண்டாக்குவது என்பதுதான் இங்கு விடயமாக காணப்படுகின்றது. இன்று தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அரசியல் கட்சி இல்லை. இருப்பதெல்லாம் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு குழு தான்.

அரசியல் கட்சி என்றாலே நாங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை பார்க்கின்றோம். இன்றைக்கு ஒரு அரசியல் கட்சி இல்லாத மக்கள் கூட்டமாக தான் நாங்கள் இருக்கின்றோம்.

இன்று எமக்கு அரசியல் கட்சி தேவை இல்லை. தமிழ் மக்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் உலகளாவிய ரீதியில் கையாளுகின்ற ஒரு அரசியல் இயக்கமே தேவைப்படுகின்றது.

அந்த அரசியல் இயக்கத்தை இன்று கட்டி எழுப்ப வேண்டிய ஒரு தேவையும் முக்கியத்துவமும் இன்று இருக்கின்றது என வலியுறுத்தியுள்ளார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய