உறுதியான சாட்சியங்களுக்கமையவே சுரேஸ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் ; மஹிந்தவின் சகாக்கள் கலக்கமடைவது ஆச்சரியமல்ல – சுனில் ஹந்துனெத்தி

சிறைச் செல்ல வேண்டிய தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியமைத்துள்ளார்கள். தீவிர விசாரணைகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களைத் தொடர்ந்தே சுரேஸ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.மஹிந்தவின் சகாக்கள் கலக்கமடைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல என்று கைத்தொழில் அபிவிருத்தி தெரிவித்தார்.

கொழும்பில் ) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

2024 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதில் இருந்து ரணில்,சஜித் மற்றும் ராஜபக்ஷர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள். இதுவரை காலமும் இந்த மூன்று தரப்பினரும் தான் ஆட்சி செய்தார்கள்.

ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தால் மஹிந்த ராஜபக்ஷவின் கால ஊழல்வாதிகளை பாதுகாப்பார், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்துக்கு ஊழல்வாதிகளை பாதுகாப்பார்.இதுவரை காலமும் இதுதான் இடம்பெற்றது. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் பரம்பரை ஆட்சி முறைமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்ததை இவர்கள் வெறுப்புடன் பார்க்கிறார்கள். ரணில் -மஹிந்த மற்றும் சஜித் ஆகியோரை நம்பி இருந்த ஊழல்வாதிகளுக்கு செல்ல இடமில்லாத காரணத்தால் திட்டமிட்ட வகையில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

சிறைச் செல்ல வேண்டிய தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியமைத்துள்ளார்கள்.கடந்த கால ஊழலுக்கு நிச்சயம் சிறைச் செல்ல நேரிடும் என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். அதனால் தான் கடந்த காலங்களில் மோதிக்கொண்டவர்கள் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள்.

சுரேஸ் சலே கைது செய்யப்பட்டதை தற்போது பிரதான அரசியல் பிரசாரமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். தீவிர விசாரணைகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களைத் தொடர்ந்தே சுரேஸ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.மஹிந்தவின் சகாக்கள் கலக்கமடைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதைத் தொடர்ந்து படுகொலையாளிகள் கலக்கமடைந்துள்ளார்கள்.

kiruba

“சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் நேரடி சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார்!” – செம்மணி மனிதப் புதைகுழி முறைப்பாட்டாளர் கிருபாகரன் அதிரடித் தகவல்!

June 30, 2026

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி “உரிமைப் பந்தம்” என்ற தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்களை

yasmin sooka

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

June 30, 2026

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும்

Pillayan-733199

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை

chemma7

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

June 30, 2026

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை

Pillayan-733199

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30)

court-judge-hammer-gavel-696x398

யாழில். தனியார் காணியை அரச காணி என பறிக்க முயற்சி ?

June 30, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர்

whats

தொலைபேசி எண் இல்லாமல் வட்ஸ்அப்?

June 30, 2026

உங்கள் தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரியாமல், ஒரு பயனர்பெயரை (username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைவதற்கான வசதியை வட்ஸ்அப் அறிமுகப்படுத்த

f

சீன தொழிலதிபரான பெண் 42 லட்சம் ரூபாய் சிகரெட்டுகளுடன் கைது

June 30, 2026

சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற

Fuel_1200px_22_10_17

எரிபொருள் விலைகளைக் குறைத்தது அரசாங்கம்: புதிய விலை விபரங்கள்

June 30, 2026

இலங்கையில் பொதுமக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் வகைகளின் விலைகளை உடனடியாகக் குறைப்பதற்குஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

eiff

ஈபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்

June 30, 2026

பாரிஸ் நகரில் நிலவிய கடும் இடியுடன் கூடிய மழையின் போது, ஐகான் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.

manoga

தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை

June 30, 2026

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பினர் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

Pol

பெரிய அளவிலான இலஞ்ச வலைப்பின்னல் தொடர்பான ஆதாரங்கள் ஆராய்வு

June 30, 2026

பெரிய அளவிலான இலஞ்ச வலைப்பின்னல் தொடர்பான ஆதாரங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதால், சிறைபிடிக்கப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்கிரமரத்ன எனும் ‘ஹரக்