உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சிறையில் இருந்த சஹ்ரான் எங்கே? – மட்டு.தேரர் கேள்வி

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சஹ்ரான், தாக்குதலுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் எப்படி சிறைச்சாலைக்குள் இருந்து வெளியில் வந்து தாக்குதலை நடத்தினார் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குண்டுத் தாக்குதலின் பின்னரே அவர் தொடர்பான காணொளிகளை பார்க்க முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சஹ்ரான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்படுகிறார். சஹ்ரானை சிறைப்படுத்த தீர்ப்பளித்த மட்டக்களப்பு நீதிபதி பின்னர் விடுமுறையில் செல்கிறார்.

அவர் விடுமுறையில் சென்ற இரண்டு நாட்களின் பின் அவருக்காக பதில் நீதிபதி சேவையில் இருந்தார்.அப்போது அவருக்கு பிணை வழங்கியது யார்?பிணை நின்றது யார்? ஏன் பரிசோதனை நடத்தவில்லை.பிணை வழங்கிய பின்னர் சஹ்ரான் எங்கு சென்றார் என்பது தொடர்பில் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை.

தாக்குதலின் பின்னர் அவர் வெளியிட்ட காணொளி நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் இலங்கையில் ISIS இருப்பதாக தெரியவந்தது.

நான் மட்டக்களப்பில் 35 வருடங்களாக இருக்கிறேன்.தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்திலும் இருந்ததால் இவை ஒவ்வொன்றும் தொடர்பில் எனக்கு நன்றாக தெரியும்.

சஹ்ரான் தனது போதனைகளுக்காக முதன் முதலில் காத்தான்குடியில் தனக்கான தளத்தை அமைத்து கொண்டு முஸ்லிம் மக்களை திரட்டும் போது நான் இது தொடர்பில் தெரிவித்தேன்.

அன்று சில ஊடகங்களில் இவை செய்திகளாக சென்றன. நீண்ட காலம் கடந்துள்ளதால்,அதாவது ஆறு வருடங்கள் கடந்து விட்டதால் சில சம்பவங்கள் ஞாபகமில்லை. பொலிஸ் புலனாய்வு திணைக்களத்திற்கு அன்று நான் வாக்குமூலம் வழங்குவதாக கூறினேன்.

என்னிடம் சாட்சியங்கள் இருப்பதாகவும் தெரிவித்தேன்.ஆனால் யாரும் எனக்கு சந்தர்ப்பம் வழங்க வில்லை.அன்று நாங்கள் கத்தி கத்தி சொன்னோம் இவ்வாறான குழுக்கள் உருவாவதாக, ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அதை கணக்கிலும் எடுக்கவில்லை என்றார்.

Dead_

சிலாபம் பாடசாலைக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு

November 18, 2025

சிலாபத்தில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என

pla

மீண்டும் கரையொதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள்

November 18, 2025

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தற்போது மன்னார் கடற்கரையோரங்களில் பிளாஸ்டிக் துகள்கள் கரையொதுங்கி வருகிறது. வடக்கு கரையோரம் சார்ந்த

1000925019

தமிழ்நாடு எஸ்பி பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 20 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்!

November 18, 2025

இந்தியா தமிழ்நாடு எஸ்பி பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக தனியார் பேருந்தில் கொண்டுசெல்லப்பட்ட இலங்கை ரூபாவில் சுமார் இருபதி கோடி

karaichchi

புத்தர் சிலை விவகாரம்; கரைச்சி பிரதேச சபையில் கண்டனம்

November 18, 2025

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையில் ஏக மனதாக கண்டனம் நிறைவேற்றம். குறித்த சம்பவம் தொடர்பான

dd

வடமராட்சியின் இரண்டாவது கந்தபுராண விழா!

November 18, 2025

வடமராட்சி கந்தபுராண கழகம் நடாத்திய இரண்டாவது கந்தபுராண விழா வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அதன் தலைவர்

1000922193

வல்வெட்டித்துறையில் 90 பேர் இரத்ததானம்!

November 18, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை இரத்ததான சங்கம்நடாத்திய இரத்ததான முகாமில் 90 பேர் இன்று இரத்ததானம் செய்துள்ளனர். வல்வெட்டித்துறை நெடியாகாடு கணபதி

dan

தனுஷ் இயக்கத்தில்; ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம்

November 18, 2025

உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம் தயாரிக்க உள்ளார்.

kan

3 நாட்களில் ரூ.25 கோடி வசூலித்த “காந்தா”

November 18, 2025

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் ‘காந்தா’. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

sim

சிம்பு -ராம்குமார் பாலகிருஷ்ணன் படம் எப்போது?

November 18, 2025

சிம்பு நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49 திரைப்படம் தயாராக இருந்தது.ஆனால் அப்படம் திடீரென தள்ளி வைக்கப்பட்ட நிலையில்

tea

2030 இல் 2.5 பில்லியன் டொலர் வரை தேயிலை ஏற்றுமதி வருமானம்?

November 18, 2025

அரசாங்கத்தால் 2030ஆம் ஆண்டு தேயிலை உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 மில்லியன் கிலோ கிராம் இலக்கில் 75 சதவீத பங்களிப்பு

raugh4

இஸ்ரேல் கருவியாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு மாற்றப்பட்டுள்ளது – ரவூப் ஹக்கீம்

November 18, 2025

பயங்கரவாத விசாரணைப்பிரிவு இஸ்ரேலுக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டிக்க முடியாத அளவுக்கு வெளிவிவகார அமைச்சு கோழைத்தனமாக

Viyaskantha

இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் இணையும் வியாஸ்காந்த்!

November 18, 2025

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில் இளம் சுழற் பந்து வீச்சாளர் விஜயகாந்த்