உயிரிழந்த பெண்ணின் கருப்பையைத் தானமாகப் பெற்று பிரித்தானியாவில் முதல் குழந்தை பிறப்பு

மருத்துவத் துறையில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், உயிரிழந்தபெண்ணிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பையைப் பொருத்தி, அதன் மூலம் பிரித்தானியாவில் முதல் முறையாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

லண்டனில் உள்ள குயீன் சார்லோட்ஸ் மற்றும் செல்சியா வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. இந்த குழந்தை 3.1 கிலோ கிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.

குழந்தையின் தாயான 30 வயதுடைய கிரேஸ் பெல், பிறப்பிலேயே ‘MRKH’ எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டவர். இதனால் அவருக்குக் கருப்பை வளர்ச்சி அடையவில்லை.

“இது ஒரு நிஜமான அதிசயம். என்னால் ஒருபோதும் தாயாக முடியும் என்று நான் நினைத்ததே இல்லை. இப்போது நான் என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறேன்,” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கிரேஸின் கணவர் ஸ்டீவ் பவல், தனது மனைவியின் இந்த நீண்ட காலப் போராட்டத்தில் உறுதுணையாக இருந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணொருவரின் கருப்பை கிரேஸிற்குப் பொருத்தப்பட்டது. அந்தக் கொடையாளியின் மூலம் கருப்பை மட்டுமல்லாது, மேலும் 05 உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 4 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

“தனது மகளை இழந்த துயரம் எங்களை வாட்டினாலும், அவளது கடைசி ஆசை ஒருவருக்கு உயிர் கொடுப்பதாக அமைந்தது எங்களுக்குச் சற்று ஆறுதலைத் தருகிறது,” எனத் தானம் வழங்கிய பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து கருப்பையைப் பெற்று பிரித்தானியாவில் ஏற்கனவே குழந்தை பிறந்துள்ளது. ஆனால், உயிரிழந்தவரிடம் இருந்து பெறப்பட்ட கருப்பை மூலம் குழந்தை பிறப்பது இதுவே முதல் முறையாகும்.

ஐரோப்பாவிலேயே இத்தகைய முறையில் குழந்தை பிறப்பது இது மூன்றாவது முறையாகும்.

இந்த வெற்றி, கருப்பை இன்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு

mahm

அஹ்மதிநிஜாத் படுகொலை; இலங்கையின் உற்ற நண்பரை இழந்து விட்டோம் – நாமல் ராஜபக்ச இரங்கல்

March 3, 2026

விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநிஜாத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது ஆழ்ந்த இரங்கலைத்

thul

துலீப் மெண்டிஸ் பதவி விலகல்

March 3, 2026

கடந்த 14 ஆண்டுகளாக ஓமான் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பணியாற்றி, அந்த அணியை சர்வதேச மட்டத்தில்

n

சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு பிரதம நீதியரசர் விஜயம்

March 3, 2026

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டார். அவரோடு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா,

pe

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நுவரெலியாவில் மூடல்?

March 3, 2026

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றுக் காலை முதல் மூடப்பட்டுள்ளன.

crude

5 நாட்களில் 82 டொலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

March 3, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால்

ha

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய ஆணைக்குழு வேண்டும் – ஹக்கீம் எம்.பி

March 3, 2026

யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு