உண்மையை மறைக்கின்றதா நிதி அமைச்சு? – ஹர்ஷ டி சில்வா கண்டனம்

இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணைப் பணம் இணையவழி ஊடுருவல் மூலம் திருடப்பட்டுள்ளமை மற்றும் அது குறித்து நிதி அமைச்சு மௌனம் காப்பது நாட்டின் நிதிப் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடன் வழங்கியவர்களுக்கு ஐந்து முறை பணம் அனுப்பியும் அது போய்ச் சேராத நிலையில், நாடு ‘தொழில்நுட்பக் கடன் மீறல்’ நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள அவர், மார்ச் மாதமே இந்த மோசடி குறித்து குழு நியமிக்கப்பட்டிருந்தும், இவ்வளவு காலம் இந்த விவகாரம் பாராளுமன்றத்திற்கு மறைக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிதி மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றத்திற்கு வெளியே இந்த விடயத்தைப் பற்றிப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டமை உண்மையில் கவலைக்குரியதாகும். அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் என்ற முறையில், இது குறித்து பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டிருந்த போதிலும், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

திறைசேரியிலிருந்து கடன் தவணைப் பணம் செலுத்தப்பட்ட போது, இணையவழி ஊடுறுவல் ஊடாக நிதி திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்துத் தெளிவுபடுத்துமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பிய போதிலும், அக்கடிதத்துக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் அது தொழில்நுட்பக் கடன் மீறலாக கருதப்படும் அபாயம் உள்ளது. ஐந்து முறை பணம் செலுத்தப்பட்டும், கடன் வழங்கியவர்களுக்குச் சேராததால் அவர்கள் இது குறித்துக் கேள்வி எழுப்பிய பின்னரே இந்த விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது.

அரசியலமைப்பின் 148ஆவது பிரிவின்படி, நாட்டின் நிதி மீதான முழு அதிகாரமும் நிதி அமைச்சுக்கோ அல்லது நிதிக்குழுவுக்கோ அல்ல, பாராளுமன்றத்துக்கே காணப்படுகிறது. கடந்த மூன்று சந்தர்ப்ப ங்களில் நிதி அமைச்சின் அதிகாரிகள் நிதிக்குழுவின் கூட்டங்களுக்கு சமூகமளிக்காமல் தவிர்த்து வருகின்றனர். கசினோ ஒழுங்குமுறை, 2025-ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கை மற்றும் திறைசேரிக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பான முக்கிய கூட்டங்களுக்கும் அவர்கள் சமூகமளிக்கவில்லை. நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதிக்கு இது குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மூன்று ஆண்டுகள் கஷ்டப்பட்டு ஈட்டிய சர்வதேச நம்பிக்கையை இத்தகைய சம்பவங்கள் சீர்குலைத்துவிடக் கூடாது. அரச கடன் மேலாண்மை சட்டத்தின்படி, புதிதாக உருவாக்கப்பட்ட கடன் மேலாண்மை அலுவலகத்தின் மூலமே இத்தகைய கொடுக்கல் வாங்கல்கள் நடைபெற வேண்டும். ஆனால், அந்த அலுவலகத்திற்கு அனுபவம் இல்லாத நபர்களை நியமிக்க வேண்டாம் எனத் நாம் ஏற்கனவே எச்சரித்திருக்கின்றோம்.

சமூக வலைதளங்களில் பரவும் தனிப்பட்ட நபர்களின் கணக்குகளுக்குப் பணம் சென்றது போன்ற தகவல்கள் குறித்துத் நான் கருத்து வெளியிட விரும்பவில்லை. பொறுப்புள்ள ஒரு பதவியில் இருப்பதால் நிதி அமைச்சின் செயலாளரின் உத்தியோகபூர்வ பதிலுக்காகக் காத்திருக்கின்றேன். மார்ச் மாதமே இது குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இவ்வளவு காலம் இந்த விடயத்தை மறைத்து வைத்திருந்தது ஏன்? நாட்டின் நிதிப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ரீதியிலான நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட நிதி அமைச்சின் அதிகாரிகள் உடனடியாக உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை