உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கூட்டம்

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைக்கு மத்தியில் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு கூடியுள்ளது.

வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால் காந்த ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் உணவுப் பாதுகாப்புக் குழு கூடியுள்ளது.

இந்த அனர்த்தத்திற்குப் பிந்தைய காலத்தில் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலை நிலைமைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

பயிர் நிலங்களுக்கு ஏற்பட்ட சேதங்களைப் பயன்படுத்தி, சில வியாபாரிகள் சந்தையில் செயற்கையாக விலையை உயர்த்த முயற்சிப்பதை முறியடிப்பதற்கு தேவையான தீர்மானங்களை உணவுப் பாதுகாப்புக் குழு எடுத்துள்ளது.

இதன்படி, சந்தையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட விலை உயர்வுகளை கட்டுப்படுத்துவதற்காக உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு போன்ற உணவுப் பொருட்களை இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் ஊடாக இறக்குமதி செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த உணவுப் பொருட்களை அரச பொறிமுறையின் ஊடாக லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு வழங்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் உணவுப் பாதுகாப்புக் குழு கலந்துரையாடியுள்ளது.

‘திட்வா’ புயலுடன் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைக்கு மத்தியில் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு வாராந்தம் கூடவும் தீர்மானித்துள்ளது.

Weather

டிசம்பர் 16 முதல் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

December 14, 2025

கிழக்கிலிருந்தான ஒரு அலை காற்றின் தாக்கம் காரணமாக டிசம்பர் 16ஆம் திகதியிலிருந்து நாட்டில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய

man

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதி விநியோக வழிகாட்டல்கள் வெளியீடு

December 14, 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதியை விநியோகிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பான வழிகாட்டுதல்களை பாதுகாப்பு அமைச்சகம்

mihi

மிகிந்தலையில் பாரிய வெடிப்புக்கள்?

December 14, 2025

மிகிந்தலை விகாரையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மிகிந்தலை விகாராதிபதி தெரிவித்துள்ளார். இன்று (14.12.2025) தேசிய கட்டிடங்கள் ஆராச்சி திணைக்களத்தின் அநுராதபுரம்

1751730278-rice-hjg-L

அனர்த்தம் ஏற்பட்டிருந்தும் கூட எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது – விவசாய அமைச்சர்

December 14, 2025

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். சில

arre

ஹேரோயினை கடத்த முற்பட்டவர் கைது

December 14, 2025

ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாக

3 dd

டித்வா புயல் காரணமாக சுமார் 6164 வரையிலான வீடுகள் முழுமையான சேதம்

December 14, 2025

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

gun

காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

December 14, 2025

பலாங்கொடை, சமனல வேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தெட்டுவ கிராமத்தின், காட்டுப் பகுதியில், கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம்

HAri

புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு!

December 14, 2025

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (10) அன்று பிரதமர்

Mujibar Rahuman

குழு ஒன்று முஜிபுரின் தங்கையிடம் விசாரணை: முஜிபுர் முறைப்பாடு

December 14, 2025

குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் குழு ஒன்று, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் கல்கிஸையில் உள்ள

ரயிலில் யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்!

December 14, 2025

ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்

சிரியாவில் அமெரிக்க வீரர்கள் படுகொலை!

December 14, 2025

சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும்

ஓமன் வளைகுடாவில் எரிபொருளுடன் கடத்தப்பட்ட கப்பல் ஒன்றை கைப்பற்றிய ஈரான்!

December 14, 2025

கடத்தப்பட்ட எரிபொருட்களுடன், ஓமன் வளைகுடாவில் ஒரு எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது இந்தியா, இலங்கை