ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் எதிர்கொண்டுள்ள ஆயுத மோதல்களுக்கு மத்தியில், ரஷ்யா எப்போதும் ஈரானின் நம்பகமான பங்காளியாக இருக்கும் என்பதை புடின் அதில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, தனது தந்தை ஆரம்பித்த பணிகளை அவர் கௌரவமான முறையில் முன்னெடுத்துச் செல்வார் என தாம் நம்புவதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.