அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள், இந்தமாதம் முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் நவம்பர் மாத பருவகால சீட்டை பயன்படுத்தி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கடந்த மாத பருவகால சீட்டை வழங்குவதன் மூலம் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம்.
அண்மைய அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.