இஸ்ரேல் கருவியாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு மாற்றப்பட்டுள்ளது – ரவூப் ஹக்கீம்

பயங்கரவாத விசாரணைப்பிரிவு இஸ்ரேலுக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டிக்க முடியாத அளவுக்கு வெளிவிவகார அமைச்சு கோழைத்தனமாக மாறியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (17) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைசசு மற்றும் நீதி மற்றம் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை. என்றாலும் இதுதொடர்பில் நாங்கள் கேள்வி எழுப்பினால் அங்கு பெளத்தர்கள் இருக்கிறார்கள். அதனால் பெளத்த விகாரை அமைப்பதில் என்ன தவறு என கேட்பீர்கள். ஆனால் யூதர்கள் இல்லாத நிலையில் ஏன் யூத வழிபாட்டு நிலையம் அமைக்கப்படுகிறது என கேட்கிறோம்.

கொழும்பில் யூதர்களின் சபாத் இல்லம் அமைக்கப்படுவது தொடர்பி்ல் இந்த சபையில் கேட்கப்பட்டபோது, அது அதிகாரம் அளிக்கப்படாத ஒன்று என பிரதமர் சபையில் தெரிவித்திருந்தார். இதனை அடிப்படையாகக்கொண்டு, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் இதுதொடர்பில் மாநகர சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மாநகர மேயரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோது, அது தொடர்பில் குறித்த உறுப்பினரை குற்றப்புலனாய்வு பிரவுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சபாத் இல்லம் மூடப்படவேண்டும் என பொதுத்துவில் பிரதேச சபையில் பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும் என முகப்புத்தகத்தில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் பொத்துவில் பொலிஸாரால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.குற்றப்புலனாய்வு பிரிவை ஏன் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்ய வேண்டு்ம் என கேட்கிறோம்.

மேலும் இஸ்ரேல் அண்மையில் கட்டார் மீது பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்தி இருந்தது. இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கட்டார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்தி இருக்கிறோம் என்றே தெரிவித்திருக்கிறது. கட்டார் மீது விமான தாக்குதல் நடத்திய இஸ்ரேலின் பெயரை குறிப்பிட்டு அதனை கண்டித்து அறிக்கை வெளியிட முடியாத அளவுக்கு வெளிவிவகார அமைச்சு கோழைத்தனமாக மாறியுள்ளது. இவ்வாறான அறிக்கை ஒன்றை வெளியிடுவதை விட வெளியிடாமல் இருந்திருக்கலாம். பயங்கரவாத தாக்குதலை நடத்திய இஸ்ரேலின் பெயரை குறிப்பிட உங்களுக்கு தைரியம் இல்லை.

அதேபோன்று பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் அநீதிகளை கண்டித்து,இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிகர் ஒட்டியமைக்காக இளைஞர் ஒருவர் பயங்கரவார தடைச்சட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.பயங்கரவாத விசாரணை பிரிவு இஸ்ரேலுக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயங்கரவார தடைச்சட்டத்தை நீக்குவதாக தெரிவித்த அரசாங்கம் தற்போது அப்பாவிகளுக்கு எதிராக அதனை பயன்படுத்தி வருகிறது என்றார்.

இதற்கு நீதி அமைச்சர், ஹர்ஷன நாணயக்கார பதிலளிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டம் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. தற்பாேது அது தமிழ். சிங்கள மொழிபெயர்ப்புக்கு விடுவிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் அது பொது மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள விடுவிக்கப்படும். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்