இலவச மருத்துவ முகாம்

36 வருடங்கள் பழமை வாய்ந்த கொழும்பு சேர்க்ள் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இவ்வருடத்தின் தலைவர் லயன் கணேஷ்வரன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கொழும்பு, ஜிந்துப்பிட்டியில் நீதிராஜா மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக லயன்ஸ் மாவட்டம் 306 டி4 இன் ஆளுநர் லயன் மகேஷ் கட்டுலந்த மற்றும் இரண்டாவது உப ஆளுநர் லயன் தினேஷ் தியாகராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்மாதம் நீரிழிவு நோய்க்கான விழிப்புணர்வு மாதம் என்பதால் லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் பலரால் நீரிழிவு பரிசோதனை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனையும் நடாத்தப்பட்டு மருந்துகள் மற்றும் சுகாதார ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

அத்தோடு, கண் பரிசோதனை செய்யப்பட்டு 650 பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.அதனை தொடர்ந்து கொழும்பு, மருதானை, கப்பித்தாவத்தையைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 30 பேருக்கு பாடசாலை புத்தகப் பைகளும் மற்றும் அப்பியாச புத்தகங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் லயன்ஸ் மாவட்டம் 306 டி4 சார்பாக லயன் அஜித் கோராலே மற்றும் லயன் பூர்ண விஜயசிங்க, கொழும்பு சேர்க்ள் லயன்ஸ் கழகம் சார்பாக லயன் குலேந்திரன், லயன் விமலேந்திரன், லயன் ராச குலசிங்கம், லயன் அமிர்த நாயகம், லயன் சுலக்ஷனா மற்றும் கொழும்பு சேர்க்ள் லியோ கழகத்தின் தலைவர் லியோ விதுஷன் மற்றும் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

லயன்ஸ் மாவட்டம் 306 டி4 இன் இரண்டாவது உப ஆளுநர் லயன் தினேஷ் தியாகராஜா கருத்து தெரிவிக்கையில்,

இந்த சமூக நலத்திட்டம் கொழும்பு சேர்க்ள் லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்களின் அனுசரணையுடன் இலவசமாக முன்னெடுக்கப்பட்டது. இன்றைய இந்த சமூக நலத்திட்டங்களை முன்னின்று ஒழுங்குப்படுத்திய வைத்தியர் லயன் குணாலனுக்கு நன்றித் தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்துடன், நீரிழிவு சம்பந்தமான விளக்கங்களுடன் புத்தகம் ஒன்றும் வைத்தியர் லயன் குணாலனால் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். இந்த புத்தகத்தை சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கவுள்ளோம். வீட்டு தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக தக்காளி, மிளகாய் போன்ற செடிகளையும் வழங்கினோம் என்றார்.

pana

பிரதேச சபையில் பதற்றம்

November 17, 2025

பாணந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்காக கூட்டப்பட்ட இன்றைய (17) அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களின்

chi

தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் பிரதமரின் கருத்து

November 17, 2025

தைவானுக்கு எதிராக சீனா பலத்தைப் பயன்படுத்தினால் ஜப்பான் ராணுவ ரீதியாகத் தலையிடக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி எச்சரித்து

gaza

அமெரிக்காவுக்கு போட்டியாக ஐ.நா?

November 17, 2025

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பான வரைவு தீர்மானத்தை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்ற அமெரிக்கா

cri

68 வயதுடைய பெண் கொலை: விசாரணை ஆரம்பம்

November 17, 2025

இரத்தினபுரி, நிவிதிகல பகுதியில் 10 ஏக்கர் தனியார் தோட்டத்தில் 68 வயதுடைய பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 2

fo

வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

November 17, 2025

இலங்கையில், செல்லுபடியான சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது தமது நாட்டின் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும்

Death-2

விபத்தில் யாசகர் பலி

November 17, 2025

கல்முனை – மட்டக்களப்பு சாலையில் ஆரையம்பதி பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொரி,

puth

சர்ச்சைக்குள்ளான புத்தர் சிலை தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர்

November 17, 2025

திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையால் ஏற்பட்ட குழப்ப நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த

ol

கைவிடப்படும் நிலையில் இந்தியாவுடனான ஒப்பந்தம்!

November 17, 2025

திருகோணமலை எண்ணெய்க் குத வளாகத்தை இந்தியாவுடன் கூட்டிணைந்து புதுப்பித்தல் மற்றும் மீளமைத்த திட்டம் தொடர்பில் அரசாங்கம் இன்னும் ஒரு முடிவை

ve

வெளிநாட்டில் கொல்லப்பட்ட இலங்கையர்; தவிக்கும் மனைவி, பிள்ளைகள்

November 17, 2025

இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்ட தனது கணவனுக்கு இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு அமைச்சும் நீதியை பெற்றுத் தர வேண்டும் என உயிரிழந்தவரின்

arrest

டோனி கைது

November 17, 2025

தெகிவளை, கல்கிஸ்ஸ தொகுதியின் JVP – NPP அமைப்பாளரும் வேட்பாளருமான (குடு/தூள்) போதை கடத்தல் வியாபாரி டோனியை போதைவஸ்து தடுப்பு

Jinthu

இலவச மருத்துவ முகாம்

November 17, 2025

36 வருடங்கள் பழமை வாய்ந்த கொழும்பு சேர்க்ள் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இவ்வருடத்தின் தலைவர் லயன் கணேஷ்வரன் தலைமையில் நேற்று

ga

கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கிப் பலி

November 17, 2025

கொழும்பு – காலி முகத்திடலில் குளித்துக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர்