இலவச பாடநூல் திட்டம்; தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள கல்வி அமைச்சின் பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழ் மன்னர்களின் பெயர்கள், அக்கால இலச்சினைகள்,கல்வெட்டுக்கள், திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. 1982 களில் இலவச பாடநூல் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்ட பின் தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி சீர்த்திருத்தத்தில் இந்த தவறு திருத்தப்படுமா என தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் பிரதமரிடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் பிரதம அமைச்சரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமாசூரியவிடம் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கையில் சிங்கள மக்களைப்போல் தமிழர்களும் வரலாற்று அடிப்படைகளைக் கொண்ட, இந்த மண்ணுக்கு பூர்வீகமான சொந்த உரித்துக்கொண்ட தேசிய இனம். விஜயனும் தோழர்களும் இந்த நாட்டுக்கு வரும் முதலே பஞ்ச ரச்சரங்களுடன் நாகர்களாக, இயக்கர்களாக தமிழர்கள் ஈழத்து மண்ணில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை, மகாவம்சம் முதல் ஆய்வாளர்கள் வரை குறிப்பிடுகிறார்கள்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் இந்த மண்ணை வன்வழைப்பு செய்து அதிகார ஆட்சி செய்த போதும் தமிழர்கள் தீரத்துடன் அவர்களுக்கு எதிராக போராடியுள்ளார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கு மண்ணில் அரசுகள் அமைத்து சங்கிலியன்,பண்டாரவன்னியன், பரராஜசேகரன் போன்ற மன்னர்கள் தீரத்துடன் தாயக தேசத்திற்காக போராடியுள்ளனர்.

நல்லநாச்சி போன்ற பெண் சிற்றரசர்களும் இந்த மண்ணின் விடுதலைக்காக போராடித் தங்களை அர்ப்பணித்தவர்கள். 1920 ஆம் ஆண்டுக்கு பின்னர் அநாகரிக தர்மபால, டி.பி. ஜாவா போல ஆறுமுகநாவலரும் சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கவும், வளர்க்கவும் போராடியுள்ளார்.

இலங்கையில் உள்ள கல்வி அமைச்சின் பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழ் மன்னர்களின் பெயர்கள்,அக்கால இலச்சினைகள்,கல்வெட்டுக்கள், திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. 1970களில் தமிழ், வரலாற்று பாடநூல்களில் தமிழரின் வரலாறு ஓரளவுக்கேனும் குறிப்பிடப்பட்டிருந்தது. 1982களில் இலவச பாட நூல் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டபின் தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வந்துள்ளதை காண முடிகிறது.

கடந்த யுத்த காலங்களை பயன்படுத்தி சங்கிலியன், பண்டாரவன்னியன்,நல்லநாச்சி, எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்களின் வரலாறுகள் இல்லாதழிக்கப்பட்டுள்ளதை அமைச்சர் அறிவாரா? இலங்கையின் விடுதலையில் தீரத்துடன் போராடிய தமிழ் மன்னர்களின் வரலாறு பாட நூல்களில் உட்புகுத்தப்படுமா? கல்வித்திட்டத்தில் வரலாற்றுப் பகுதியில் தமிழர் வரலாற்றுக்குரிய தனி அங்கீகாரம் வழங்குவதில் என்ன தடை இருக்கிறது?

தமிழர் வரலாற்றின் இலட்சினைகள், கல்வெட்டுக்கள், ஓலைகள் இந்நாட்டில் பாதுகாப்பாக பேணப்படுகின்றதா? சங்கிலியன்,பண்டாரவன்னியன் நல்லநாச்சி, எல்லாளன் போன்ற மன்னர்களின் வரலாறுகளை தமிழ், வரலாறு, சித்திரப் பாடங்களில் இருப்பதற்கு தங்களால் உறுதிப்பாடு தரமுடியுமா? என்று கேள்வியெழுப்பினார்.

accident

கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து; சிறுவன் உயிரிழப்பு – பெற்றோர் படுகாயம்

May 26, 2026

கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு, வீதியோரமிருந்த மதிலுடன் மோதி இடம்பெற்ற கொடூர விபத்தில் 12 வயதுடைய சிறுவன்

sha

விமல்வீரவங்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

May 26, 2026

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, கடவுச்சீட்டு பெற்றதாக சஷி வீரவங்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணை ஜூலை 24 ஆம்

Anunayake

தற்போது பௌத்த சாசனத்திற்கு இருண்ட காலம் ஏற்பட்டுவிட்டது…

May 26, 2026

பௌத்த சாசனத்திற்கு தற்போது ஒரு இருண்ட காலம் உருவாகியுள்ளதாகவும், இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பௌத்த சமூகத்தின் நான்கு பிரிவினரும் ஒன்றிணைய

ele

தேர்தல் சட்டங்கள் மீளாய்வு

May 26, 2026

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான

f

தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடைவதால் பழிவாங்கல் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன!

May 26, 2026

தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையப் போகின்ற காரணத்தினாலேயே இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து வயலுக்குள் கவிழ்ந்து விபத்து!

May 25, 2026

கஹதுடுவ, தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று இன்று (25) மாலை வீதியை விட்டு விலகி வயல்வெளியொன்றுக்குள்

Weather war

தொடரும் மண்சரிவு எச்சரிக்கை

May 25, 2026

ஆறு மாவட்டங்களிலுள்ள 24 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கைகளைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி

vesa

வடக்கில் வெசாக் நிகழ்வுகளுக்கு தடை?

May 25, 2026

தன்சல் நடத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்தி குறித்து வட மாகாண ஆளுநரினால் அறிக்கை ஒன்று

WhatsApp Image 2026-05-25 at 22.57.47

கரடிப்போக்கு – உருத்திரபுரம் வாகன விபத்தில் இளம் தாய் பலி

May 25, 2026

கரடிப்போக்கு – உருத்திரபுரம் வாகன விபத்தில் இளம் தாய் பலிகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடிப்போக்கு – உருத்திரபுரம் பகுதியில் இன்று

par

சிறுவர் துஷ்பிரயோகம்: எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் தீர்மானம்

May 25, 2026

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து

kalu

மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

May 25, 2026

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலுக்குப் படகில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று

Jeyatheepa

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஜெயதீபா!

May 25, 2026

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஜெயதீபா புண்ணியமூர்த்தி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரையின் பிரகாரம் இந்தத் தெரிவு