இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு ?

சபாநாயகருக்கு எதிராகவும் இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீடுகளை பாவிப்பதாகவும், அதற்குரிய வாடகை பெறுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆகவே சபாநாயகர் அக்கிராசனத்தில் அமரமுடியாது என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை கடுமையாக சாடினார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது, ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்துள்ளேன்.

உங்களுக்கு (சபாநாயகரை நோக்கி) எதிராகவும் இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இரண்டு வீடுகளை பாவிப்பதாகவும், அதற்குரிய வாடகை பெறுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆகவே உங்களுக்கு அக்கிராசனத்தில் அமரமுடியாது. எனது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை பற்றி பேசுவதற்கு இடமளியுங்கள் என்றார்.

சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இது சிறப்புரிமை மீறல் பிரச்சினையில்லை என்றார்.

சாமர சம்பத் இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நீங்கள் (சபாநாயகரை நோக்கி) எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைப்பதற்கு இடமளிப்பதில்லை.

சிறப்புரிமை மீறல் பிரச்சினை முன்வைத்தால் அது பற்றி ஆராய்வதற்கு சிறப்புரிமை மீறல் தொடர்பான குழு உள்ளது. நீங்கள் அவ்வாறு செயற்படுவதாக இருந்தால் நிலையியல் கட்டளையில் இருந்து சிறப்புரிமை மீறல் தொடர்பான குழுவை நீக்குங்கள். உங்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு காணப்படுவதாலா, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைக்க இடமளிக்க மறுக்கின்றீர்கள்.என்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன,இதில் எவ்வித ஒழுங்குப்பிரச்சினையும் இல்லை. சாமர சம்பத் முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையில், அவரது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை முறையாக குறிப்பிடப்படவில்லை. அவற்றை தெளிவாக குறிப்பிட்டு சிறப்புரிமை மீறல் பிரச்சினையை மீண்டும் சமர்ப்பிக்கலாம் என்றார்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த