இலங்கை: மோதல்களைத் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் மரணங்கள் குறித்து அவசரமாக விசாரிக்கப்பட வேண்டும்-சர்வதேச மன்னிப்புச் சபை

குறைந்தது ஏழு சிறை அதிகாரிகள் உட்பட 26 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான வன்முறையைத் தொடர்ந்து, நீர்கொழும்பு (Negombo) சிறைச்சாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளியாகும் அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் (Amnesty International) தெற்காசியாவிற்கான பிரதி பிராந்திய பணிப்பாளர் பாபு ராம் பந்த் (Babu Ram Pant) பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

“இந்த மரணங்கள் குறித்து வெளியாகும் அறிக்கைகளும், நீர்கொழும்பில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஏனைய கைதிகள் மீதான சித்திரவதைகள் மற்றும் பிற மோசமான நடத்தைகள் குறித்த குற்றச்சாட்டுகளும் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. இந்த கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. அனைத்து மரணங்கள் நிகழ்ந்த விபரங்கள் குறித்தும் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுடன், கைதிகளின் நல்வாழ்வைச் சரிபார்ப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு (HRCSL) முழுமையான அனுமதி வழங்கப்பட வேண்டும். சட்டத்தரணிகள் காவலில் உள்ள தங்களது கட்சிக்காரர்களைச் சந்திப்பதும், குடும்ப உறுப்பினர்கள் தங்களது அன்புக்குரியவர்களைப் பார்ப்பதும் மிக முக்கியமானதாகும். மருத்துவக் கவனிப்பு தேவைப்படும் எவருக்கும் தாமதமின்றி அது வழங்கப்பட வேண்டும்.”

“இந்த கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது.” — பாபு ராம் பந்த், சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதி பிராந்திய பணிப்பாளர்

“நீர்கொழும்பில் ஏற்பட்ட மோதல்கள் குறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த விசாரணை பாரபட்சமற்றதாகவும், சுதந்திரமானதாகவும் மற்றும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்றும், அத்துடன் உயிரிழப்பை ஏற்படுத்திய பலப்பிரயோகத்திற்கு (use of force) வழிவகுத்த சூழ்நிலைகள் என்ன என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த சோகமான நிகழ்வானது, இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் உள்ள நீண்டகாலப் பிரச்சினைகளை மீண்டும் ஒருமுறை கோடிட்டுக் காட்டுகிறது. கடந்த மாதம் மாத்திரம் மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து, சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐநா துணைக் குழுவானது (UN Subcommittee on Prevention of Torture), நீண்டகாலமாக நீடிக்கும் விளக்கமறியல் (pretrial detention), அதிகளவிலான கைதிகள் நெரிசல் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள போதிய வசதியின்மை குறித்து மீண்டும் எச்சரித்திருந்தது. ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய தங்களது விஜயத்திற்குப் பின்னர், நிலைமைகளில் எந்தவொரு அர்த்தமுள்ள முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதையும் அவர்களின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நீண்டகாலமாக நிலவி வரும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அதிகாரிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவது, சிறை வன்முறைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதுடன், கைதிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பையும் ஆபத்துக்குள்ளாக்குகிறது.”

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்

5

காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி!

July 27, 2026

ஹைதராபாத்: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி

missing per fa

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு: யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 30இல் நடத்த ஏற்பாடு!

July 27, 2026

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட சர்வதேச மாநாடு ஒன்றை

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை